Friday, February 4, 2011

நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள அசாஞ்சே

ஜூலியன் அசாஞ்சேவை நார்வே நாட்டைச்சே‌ர்‌ந்த நாடாளுமன்ற
உறுப்பினர் ஷ்னார் வேலன் என்பவரால் நோபல் பரிசுக்காக பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விக்கிலீக்ஸ் ஸ்தாபகரான அசாஞ்சே உலக நாடுகளின் இரகசிய ஆவணங்களை வெளியுலகிற்கு தெரிய வைத்தார்.  அசாஞ்சேயின் இந்த செயலானது தகவலறியும் மற்றும் ஜனநாயக உரிமைகளை நிலைநிறுத்தியுள்ளதாக கருதியே தான் இவ்வாறு சிபாரிசு செய்ததாக தெரிவித்துள்ளார் நோர்வேயின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷ்னார் வேலன்.

தனிஷ்யா நாட்டு புரட்சிக்கும் வித்துட்டவர் இவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் நோபல் பரிசுக்குழு இது தொடர்பாக எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.

No comments: