Friday, December 23, 2011

உலகின் 'எதிர்கால நட்சத்திரங்கள்' பட்டியலில் 10 இந்திய இளைஞர்கள்

வாஷிங்டன்: நாளைய உலகின் 'எதிர்கால நட்சத்திரங்கள்' பட்டியலில் 30 வயதுக்கு குறைவான 10 இந்திய இளைஞர்கள் இடம் பிடித்துள்ளனர்.

போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில், நிதி, ஊடகம், சட்டம், பொழுதுபோக்கு, அறிவியல், தொழில்நுட்பம், எரிசக்தி உள்ளிட்ட 12 துறைகளில் சர்வதேச அளவில் சாதனை சுவடுகளை பதித்து வரும் 30 வயதுக்கும் குறைவான இளைஞர்கள் இடம் பிடித்துள்ளனர்.

அவர்களது விவரம்:

1. பரம் ஜக்கி (வயது 17). இவர் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை, ஆக்ஸிஜனாக மாற்றும் பாசியை (algae) அடிப்படையாகக் கொண்ட கருவியை உருவாக்கியுள்ளார்.

2. 23 வயதான விவேக் நாயர். டமாஸ்கஸ் பவுன்டேஷன் என்ற அமைப்பின் தலைமை செயல் அதிகாரி. கார்பனைக் கட்டுப்படுத்த உதவும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறார்.

3. குணால் ஷா (வயது 29). இவர் பிரபல கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கணித பட்டதாரியான இவர், கடந்த 2004ம் ஆண்டில் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். 27 வயதில் இதன் நிர்வாக இயக்குனர் பதவிக்கு வந்துவிட்டார்.

4. விகாஸ் மொகிந்திரா. 25 வயதான இவர் பேங்க் ஆப் அமெரிக்கா மெர்ரில்லிஞ்ச் நிறுவனத்தின் நிதி ஆலோசகராக உள்ளார்.

5. மன்வீர் நிஜார். 28 வயதான இவர் சிட்டி வங்கியின் ஐரோப்பிய முன்பேர பங்கு வர்த்தக பிரிவின் இணைத் தலைவராக உள்ளார். லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்சில் படித்தவர்.

6. 29 வயதான ராஜ் கிருஷ்ணன், பயலாஜிகல் டைனமிக்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குனராக உள்ளார். புற்றுநோயைக் கண்டறிய உதவும் புதிய ரத்தப் பரிசோதனையை கண்டுபிடித்தவர் இவர். ரத்தத்தின் மின்வீச்சை வைத்து புற்றுநோயை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்.

7. சிதாந்த் குப்தா. 27 வயதான வாஷிங்டன் பல்கலைக்கழக மாணவரான இவர், மின்சாரம், கேஸ், வெப்பத்தின் தேவையைக் குறைக்கும் சென்சார்கள் மற்றும் சாப்ட்வேரை உருவாக்கி வருகிறார்.

8. 24 வயதான நிகில் அரோரா, இவர் குறைந்த விலையில் உண்ணத்தகுந்த காளான்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர் ஆவார்.

9. மன்ஜீத் அகுஜா- 17 வயதான இவர் சிஎன்பிசியின் தயாரிப்பாளராகவும், அமெரிக்கப் பங்குச் சந்தையில் வணிகத்திலும் ஈடுபட்டுள்ளார்.

இவர்கள் உள்பட 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.

Friday, December 2, 2011

உண்மைஉணர்த்தும் "புரோக்கரிங்நியூஸ்' குறும்படம்; அரசியல்- கம்பெனிகளால் வளைக்கப்படும்மீடியா

கோவா: பணம் கொடுத்து தங்கள் செல்வாக்கை உயர்த்தவும், பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் பெரும் நிறுவனங்கள், மீடியாக்களை தவறாக பயன்படுத்துகின்றன என்ற அம்சத்தை கொண்டு பிரசார் பாரதி ஒரு குறும்படத்தை உருவாக்கியிருக்கிறது. இதில் பத்திரிகைகள் எப்படி தரம் தாழ்ந்து போயிருக்கிறது என்பதை படம் பிடித்து காட்டுகிறது.
பிரசார் பாரதி, தூர்தர்ஷனுக்காக - உமேஷ் அகர்வால் உருவாக்கியிருக்கும் "புரோக்கரிங் நியூஸ்'. பல அதிர்ச்சி தரும் விஷயங்களை வெளிப்படுத்துகிறது. அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், பெரிய நிறுவனங்கள் பணம் கொடுத்து நாளிதழ்களிலும், டி. வி.,க்களிலும் கவரேஜ் பெறுவதை காண்பிக்கும்புரோக்கரிங் நியூஸ் என்ற டாகுமென்டரி படத்தில் வரும் சில தகவல்கள் இதோ:

* லோக் மத், மஹாராஷ்டிரா டைம்ஸ் மற்றொரு தினசரி, மூன்றிலும், மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான் பற்றிய வெளியான கட்டுரைகள் ஒரே மாதிரியாக, வார்த்தைக்கு வார்த்தை ஒன்றாக, ஆனால் மூன்று வெவ்வேறு எழுத்தாளர்களின் பெயர்களில் வெளியாகியிருக்கிறது.

* ஆந்திராவில், பி.கே. ராமராவ் என்ற வேட்பாளர் ஈநாடு தினசரியில் நல்ல கவரேஜ் பெற்றதற்கு, ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தது மட்டுமல்லாமல் தேர்தல் கமிஷனுக்கு, இதை தான் தேர்தலுக்கு செய்த செலவாகவும் காட்டியிருக்கிறார் இதுவும் ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

* காங்கிரஸ் பீகாரில் சரித்திரம் படைக்கவிருக்கிறது என்று ஒரு இந்தி பேப்பரில் எட்டு காலம் தலைப்புச் செய்தி. தலைப்பைத் தவிர வேறு செய்தி கீழே இல்லை.

* பர்க்கா தத், நிரா ராடியா இருவருக்கும் இடையே கருணாநிதி, ராஜா,, டி.ஆர்., பாலு, கனிமொழி என்று பல திமுக தலைவர்களை குறிப்பிட்டு, மந்திரி பதவி பெறுவது பற்றிய பேச்சின் ஆடியோ குரல்.

* சி.என்.என்., ஐபின் ராஜ்தீப் சர்தேசாய் பர்காதத் சில பத்திரிகை/டிவி ஆசிரியர் திரைப்பட இயக்குனர் மகேஷ் பட், ஷோபா டே போன்றவர் மீடியா துறையில் உள்ளவர்களை பற்றி கருத்துக்கள்.

* ஐபிஎல் கிரிக்கெட்டில் மீடியாவின் பங்கு , திமுக கட்சி பிரமுகர்களுக்கு ( சன்டிவி, கலைஞர் டிவி), அ.தி.மு.க.,வினருக்கு ஜெயா டிவி, விஜய்காந்த - கேப்டன் டிவி, பாட்டாளி மக்கள் கட்சி - மக்கள் டிவி, காங்கிரஸ் - வசந்த் டிவி, கேரளாவிலும், ஆந்திராவிலும் அரசியல் பிரமுகர்கள் ஆதிக்கத்தில் பல டிவி சேனல்கள் இயங்குகிறது. பல டிவி சேனல்களில் பிரத்யேக பேட்டிக்கு, பணம் பெறப்படுவதும், இது 50% பணமாக, 50% செக் மூலமாக பெறுகின்றனர்.என்றும் காட்டப்பட்டுள்ளது.

பணம் கொடுத்து, தாங்கள் விரும்பியவாறு செய்திகள், கருத்துக்கள், பப்ளிசிட்டி பெறுவதற்கு அதிகம் ஈடுபடுபவர்கள், அரசியல்வாதிகளா, பெரிய கம்பெனிகளா (வியாபார நிறுவனங்களா), என்பது கடினமான கேள்வி. திரைப்படத்துறையிலும் இந்த ட்ரென்ட் வந்துவிட்டது.

உமேஷ் அகர்வால், ஒன்றரை ஆண்டுகாலம் உழைத்து இந்த ஒரு மணி நேர டாகுமென்ட்ரியை உருவாக்கியுள்ளார். கடந்த (30ம் தேதி ) திரைப்பட விழாவில், திரையிடப்பட்டபோது, அரங்கு நிரம்பியது. படத்தை தொடர்ந்து முப்பது நிமிடங்களுக்கு மேலாக, கேள்வி-பதில் விவாதம் நடைபெற்றது. பிரசார் பாரதியிடமிருந்து இந்த படத்தின் டி.விடி பெறலாம். லஞ்சமற்ற இந்தியா விரும்பும் அனைவரும் பார்த்தால் நல்லது.

சமீபத்தில் கூட , பணம் பெற்ற செய்திகள் நாளிதழ் மற்றும் டிவியில் வெளியிடுவது குறித்து பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் இரு நிபுணர்கள் கொண்ட கமிட்டி, விஷயத்தை முழுமையாக ஆராய்ந்து, ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதன் சுருக்கம், இணைய தளத்திலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. - ரஜத் 

Saturday, October 15, 2011

35 ஆண்டு கால பணியில் 33 முறை டிரான்ஸ்பர்!: "நேர்மைக்கு சாட்சி' என்கிறார் சுயேச்சை இன்ஸ்பெக்டர்

மேட்டுப்பாளையம்: ""ஊழலுக்கு எதிராக மக்கள் ஓட்டளிக்க வேண்டும். 35 ஆண்டு போலீஸ் பணியில் 33 முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டதே, எனது நேர்மைக்கு சாட்சியம்,'' என்று மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாராஜன் பேசினார்.

மேட்டுப்பாளையம் அனைத்து வணிகர் சங்கம் சார்பில், நகர்மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் சந்திப்பு நடந்தது. தே.மு.தி.க., வேட்பாளர் ஜாபர் சாதிக் பேசுகையில், ""நகரில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து, தொழில் வளர்ச்சி அடைய முயற்சிப்பேன்,'' என்றார். காங்கிரஸ் வேட்பாளர் சத்தியவதி பேசுகையில், ""பாதாள சாக்கடை திட்டம், விளையாட்டு மைதானம் அமைப்பேன். மத்திய அரசு திட்டத்தில் குடிசை இல்லாத நகரமாக மாற்ற முயற்சி செய்வேன்,' என்றார். பா.ஜ., வேட்பாளர் சதீஷ்குமார், ""சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்க நகரில் அதிக மரக்கன்றுகள் நடப்படும். ஒவ்வொரு வீதிக்கும் பெயர் பலகை வைக்கப்படும். தூய்மையான, சுகாதாரமான நகரமாக மாற்றுவேன். கிழங்கு மண்டிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பேன்,'' என்றார். தி.மு.க., வேட்பாளர் அப்துல் அமீது, ""நகரில் 60 சதவீதம் மக்களுக்கு சீரான குடிநீர் கிடைப்பதில்லை. முதலில் சீரான குடிநீர், சுகாதாரமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்,'' என்றார்.
சுயேச்சை வேட்பாளர் மகாராஜன், ""நகரின் தந்தை என்ற பதவிக்கு ஏற்ப நான் நடந்து கொள்வேன். போலீசில் எஸ்.ஐ., இன்ஸ்பெக்டராக 35 ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். துறையில் நேர்மையான எனக்கு கிடைத்த பரிசு 33 முறை டிரான்ஸ்பர். எனவே ஊழலுக்கு எதிராகவும், உண்மைக்கும், உழைப்புக்கும் நீங்க ஓட்டளிக்க வேண்டும்,'' என்றார்.

ம.தி.மு.க.,வேட்பாளர் ஜெயக்குமார், ""போக்குவரத்து நெரிசல் சரி செய்வேன். மக்கள் கூட்டு முயற்சியுடன் திட்டங்களை நிறைவேற்றுவேன்,' என்றார். அ.தி.மு.க., வேட்பாளர் நாசர், ""அரசு அறிவித்துள்ள அனைத்து நலத்திட்டங்களையும் மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்ப்பேன். அனைத்து வணிகர் சங்கம் 13 கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. நான் வெற்றி பெற்றால், எம்.எல்.ஏ., வாயிலாக முதல்வரிடம் பேசி இவற்றை நிறைவேற்ற பாடுபடுவேன்,'' என்றார். நுகர்வோர் பாதுகாப்பு இயக்க தலைவர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். கோவை மாவட்ட வணிகர் சங்கத்தலைவர் மாணிக்கம், மேட்டுப்பாளையம் அனைத்து வணிகர் சங்க தலைவர் அமீர் ஹம்சா, பொருளாளர் தண்டபாணி, தலைவர் ராஜேந்திரன், நுகர்வோர் முன்னாள் செயலாளர் வதூத், செயலாளர் யுவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து வணிகர் சங்க செயலாளர் சுபான் வரவேற்றார். அமைப்பாளர் ஹபிபுல்லா நன்றி கூறினார். 
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=331818

Tuesday, October 11, 2011

வீட்டுக்குள் நுழையும் போது தானாக எரியும் மின் விளக்கு

தர்மபுரி : வீட்டுக்குள் நாம் நுழைந்தவுடன் தானா எரியும், வெளியில் வந்தால் தானாக அணையும் மின் விளக்கை தர்மபுரி இந்தியன் அறிவியல் மையம் சார்பில் அறிமுகம் செய்துள்ளது.

தர்மபுரி இந்தியன் அறிவியல் மையம் சார்பில் மாணவர்களின் அறிவியல் திறமையை வளர்க்கவும், சாதாரண பொருட்கள் மூலம் அறிவியல் புதுமை கண்டுபிடிப்புகளை மாணவர்கள் மூலம் செய்யவும் உறுதுணையாக இருந்து வருகிறது. தற்போது, வீட்டுக்குள் நுழைந்தவுடன் எரியும் வகையிலும், அறையை விட்டு வெளியில் வந்தால், லைட் அணையும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.இதற்காக பிரத்தியோகமாக தயார் செய்யப்பட்டுள்ள பெட்டியில் பிளக் பின் மற்றும் ஒரு மின் விளக்கு பொருத்தப்பட்டடுள்ளது.

இந்த பெட்டியில் உள்ள சென்சார் போர்டு மூலம் மனித உடலில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சுக்கள் மூலம் விளக்கு அணைந்து, எரியும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.நம் வீட்டில் உள்ள மின் அமைபின் மொத்தமும் பிரத்தியோக பெட்டியில் இணைக்கும் வகையில் பிளக் பின் மூலம் இணைத்து வைக்க வேண்டும். பகல் நேரங்களில் நமக்கு இது பயன் இல்லை என்பதால், ஆஃப் செய்து வைத்து கொள்ளலாம். இரவு நேரங்களில் நவீன பெட்டியில் இணைப்பு கொடுத்து விட்டால், நாம் எந்த அறைக்கு சென்றாலும் அந்த அறையில் மின் விளக்கு எரியும்.

அதே போல் அந்த அறையை விட்டு வெளியில் வந்து விட்டால், சுவிட்ச் ஆஃப் செய்யாமல் ஆட்டோமெட்டிக்காக மின் விளக்கு எரிவது நின்று விடும்.இந்த கண்டுபிடிப்பை விரைவில் இந்தியன் அறிவியல் மைய விஞ்ஞானி ஜெயபாண்டியன் அறிமுகம் செய்ய உள்ளார். நாகாவதி அணை மாணவர்கள் சரண்யா, சங்கீதா, கீஷோர்குமார் ஆகியோர் தயார் செய்துள்ளனர். 
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=329532

Wednesday, September 28, 2011

நேர்மையின் மதிப்பு ரூ.2000: ரயிலில் கிடந்த ரூ.10லட்சத்தை ஒப்படைத்த பணியாளர்

போபால், செப்.27: ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பணப்பையை எடுத்து அதில் பத்து லட்ச ரூபாய் இருப்பது தெரிந்தும் அதை உயரதிகாரிகளிடம் ஒப்படைத்த ரயில்வே பணியாளரின் நேர்மைக்கு பரிசாக ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது.எத்தனையோ இந்தியர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறுவயதில் கற்ற நேர்மையையும் உயர்ந்த பண்பையும் தங்கள் வறுமையிலும் செம்மையாகக் கடைப்பிடித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் பகவான் தாஸ்.இந்திய ரயில்வே பணியாளரான இவர், கடந்த 1984 முதல் ரயில்வே துறையில் அட்டெண்டராகப் பணி செய்து வருகிறார். ரயில், நிலையத்தை வந்தடைந்த பிறகு, பெட்டிகளில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான பொருள்களை சரிபார்த்து ஒப்படைப்பதே இவர் வேலை. எத்தனையோ முறை நம் ‘நேர்மையான’ இந்திய பயணிகள், ரயில் பயணத்தில் கொடுக்கப்படும் துண்டு, போர்வைகளை ‘இலவச’ பொருள்களாய் எடுத்துச் சென்றுவிடுவதுண்டு. அப்போதெல்லாம் அவற்றுக்கான தண்டத் தொகை பகவான் தாஸின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, குடும்ப பட்ஜெட்டில் ’வெட்டு’ விழுந்ததுண்டு. ஆனாலும், இளவயதில் பாரம்பரியமாகக் கற்ற நேர்மை குணத்தை அவர் கைவிட்டதில்லை. கடந்த செப்.15ம் தேதி அவர் நேர்மைக்கு ஒரு சோதனை. ரயிலில் பயணம் செய்த காங்கிரஸ் எம்.பி. சந்தீப் தீக்‌ஷித் தான் கொண்டுவந்திருந்த ரூ.10 லட்சம் ரூபாய் உள்ள பையை ரயிலில் வைத்துவிட்டு இறங்கிவிட்டார். வழக்கம்போல் ரயில் பெட்டியில் சோதனை மேற்கொண்ட பகவான் தாஸ், பணப் பையைப் பார்த்தார். ரூபாய் கட்டுகள் தெரிந்தன. அவர் மனத்தில் ஒரு நொடிகூட சலனம் எழவில்லை. உடனடியாக அந்தப் பையை எடுத்தார். அலுவலகம் சென்றார். உயர் அதிகாரியிடம் சொல்லி ஒப்படைத்தார்.ஊழல் செய்திகள் பத்திரிகைகளில் ஒரு சிறு இடத்தையும் விடாமல் ஆக்கிரமித்திருக்கும் இந்நாளில், பகவான் தாஸ் போன்றவர்களின் நேர்மை சின்னஞ்சிறு இடத்தையும் ஆக்கிரமிக்காதது ஆச்சரியம்தான். மக்களின் மனங்களில் இவர் போன்றவர்களின் நேர்மை ஆக்கிரமிக்குமானால் நிச்சயம் பத்திரிகைகளில் பத்திகளிலும் இடம்பெறுமோ என்னவோ?தன் செயல் குறித்து பகவான் தாஸ் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அவர் கூறுவதைக் கேட்டால் நமக்குள் இறைவன் நல்லவரைத்தான் சோதிப்பான் என்ற உண்மை நங்கூரம் பாய்ச்சி நிலைகொள்ளும்.‘’எனக்குக் கிடைக்கும் சொற்ப சம்பளத்தைக் கொண்டு வாழ்க்கையை நடத்துகிறேன். என் குடும்பமும் மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. அன்று ரயிலில் சோதனை மேற்கொண்ட போது பணப்பையைப் பார்த்தேன். உடனே மெக்கானிக்கை அழைத்துக் காட்டினேன். அவரிடம், இந்தப் பையை நாம் நம் உயரதிகாரிகளிடம் ஒப்படைத்து, இந்தப் பணத்தை உரியவரிடம் சேர்க்க உதவ வேண்டும் என்று சொன்னேன்...”பகவான் தாஸ் சொன்னது போல் செய்தார். அவருக்குப் பரிசாக ஜபல்பூர் பகுதி உயரதிகாரியிடம் இருந்து அவருக்குப் பரிசாக ரூ.2000 கிடைத்தது. இருப்பினும், உயரதிகாரிகள் பகவான் தாஸின் செயலுக்கு தகுந்த பரிசு அளிக்கும்படி ரயில்வேத் துறைக்கு சிபாரிசுக் கடிதம் அனுப்பி வைத்தனர். ஆனால், ஜான்ஸி அருகில் உள்ள லலித்பூரில் வசிக்கும் 54 வயது பகவான் தாஸோ, பணம் ஒரு பொருட்டல்ல என்கிறார். எனக்கு மூன்று மகன்கள். அவர்களுக்கு ஏழைக் குடும்பத்தில் இருந்துதான் பெண் எடுத்தேன். என் இரு மகள்களையும் ஏழைக் குடும்பத்துக்குத்தான் மருமகள்கள் ஆக்கினேன். ஆனால் அவர்கள் செம்மையாக வாழக் கற்றுக்  கொண்டவர்கள். பணத்துக்காக நற்பண்புகளை விட்டுவிடக்கூடாது” என்கிறார்.அண்ணா ஹஸாரே உண்ணாவிரதம் இருந்த நேரத்தில், அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக ராம் லீலா மைதானத்தை நோக்கி இவரும் சென்றார். ஆனால், அங்கே திரண்டிருந்த மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் இவரால் அண்ணா ஹஸாரேவின் அருகில்கூட செல்ல முடியவில்லை. கூட்டத்தால் ஒதுக்கித் தள்ளப்பட்ட பகவான் தாஸ், அப்படியே திரும்பினார். ஆனாலும் அவர் மனத்தில் கொஞ்சமும் வருத்தம் ஏற்படவில்லை. ஒவ்வொரு நாளும் அழுக்கடைந்த பிளாட்பாரங்களில், அழுக்கடைந்த மனிதர்களுக்கு மத்தியில் நேர்மையோடு தூய்மையாக செயல்படும் பகவான் தாஸ் போன்றவர்களின் வாழ்க்கைச் செய்தி, ஆயிரம் அண்ணா ஹசாரேக்களின் உண்ணாவிரதச் செய்தியை விட மேலானதன்றோ?! 

Tuesday, September 27, 2011

பஞ்சர் பிரச்னைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் பஞ்சர் ஜெல்

வாகனத்தில் செல்லும்போது நம்மை டென்ஷனின் உச்சிக்கே கொண்டு செல்வது பஞ்சர் பிரச்னை. அலுவலகம் செல்லும்போதோ, அவசரமாக செல்லும்போதோ டயர் பஞ்சரானால் நமக்கு பிபி எகிறுவது இயல்பு. குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பஞ்சராகும்போது நேர்கொள்ளும் அவஸ்தைகள் ஏராளம்.

இந்த நிலையில், பஞ்சர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு திரவம் போன்று இருக்கும் பஞ்சர் ஜெல் உதவுகிறது. இந்த பஞ்சர் ஜெல்லை(பஞ்சர் சீலேண்ட் என்றும் கூறுகின்றனர்) சிறிய கம்ப்ரஷர் மூலம் வாகனங்களின் ட்யூப்களில் செலுத்துகின்றனர்.

டயர் பஞ்சராகும்போது ட்யூப் உள்ளே ஊற்றப்பட்டிருக்கும் இந்த திரவம் அந்த இடத்தில் உறைந்து பஞ்சராகாமல் பாதுகாக்கும். தற்போது பஞ்சர் கில்லர் என்ற நிறுவனம் தயாரிக்கும் பஞச்ர் ஜெல் மார்க்கெட்டிற்கு வந்துள்ளது.

இந்த பஞ்சர் புரூப் ஜெல் எத்தனை முறை டயர் பஞசர் ஆனாலும் ட்யூப்களிலிருந்து காற்று வெளியேறாமல் தடுக்கும் என்று பஞ்சர் கில்லர் நிறுவனம் தெரிவிக்கிறது. எனவே, டயர் முழுவதும் இந்த ஜெல் பஞ்சர் தொல்லையிலிருந்து விடுதலை கொடுக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

முள், ஆணி என்று எதுவாயினும் டயர்களில் குத்தி பஞ்சராக்கினாலும், பஞ்சர் கில்லர் ஜெல் நிரப்பப்பட்ட டயர்களில் காற்று வெளியேறாது என்று அந்த நிறுவனம் தனது தயாரிப்புக்கு சான்றளிக்கிறது.

பஞ்சர் கில்லர் சில முக்கிய அம்சங்கள்:

டயர்களிலிருந்து காற்று கசிவு மற்றும் பஞ்சரனால் காற்று வெளியேறாமல் தடுக்கும்

டயர்களின் ஆயுளை கூட்டும்

சாதாரண டயரை பஞ்சர் புரூப் டயராக மாற்றும்

ட்யூப்களில் காற்றின் அளவை சீராக வைக்கும்

பஞ்சர் கில்லர் ஜெல் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாது

சாதாரண டயர் மற்றும் ட்யூப்லெஸ் டயர்களில் பயன்படுத்தலாம்

நிம்மதியான பயணத்தை வழங்கும்

இதுதொடர்பாக, பஞ்சர் கில்லர் நிறுவனத்தின் அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டு கேட்டோம். அவர் கூறியதாவது,"ஒரு லிட்டர் பஞ்சர் கில்லர் ஜெல் விலை ரூ.1,399க்கு விற்பனை செய்கிறோம். இருசக்கர வாகனங்களின் இரண்டு டயர்களுக்கும் சேர்த்து 600 மிலி இருந்தால் போதுமானது. எங்களிடம் ஆர்டர் செய்தால் எங்களது பிரதிநிதிகளே நேரில் வந்து டயர்களில் பஞ்சர் கில்லர் ஜெல்லை செலுத்திக்கொடுத்துவிடுவர்," என்று கூறினார்.

Tuesday, September 13, 2011

எழுத்தாளர் ஜெயலலிதா



முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஜெயலலிதா என்றொரு எழுத்தாளர் இருந்தார். அவர் எண்பதுகளில் கல்கியிலும் குமுதத்திலும் இரண்டு முழுநீள நாவல்களை எழுதியவர். சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியுள்ளாரா என்பது தெரியவில்லை.

திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று தமிழகம் அறிந்த நடிகையாக வாழ்ந்த நாட்களில் எழுதியவை அந்த இரண்டு நாவல்களும். பின்னாளில் அவர் புரட்சிதலைவியாகி தமிழக முதல்வர் ஆனதெல்லாம் வரலாறு. அவர் எழுத்தாளராக இருந்தார் என்பதுதான் ஆச்சர்யமான செய்தி. எழுத்தாளராகவே இருந்திருக்கலாம்!

ஜெ எழுதிய இந்நாவல் குறித்து கேள்விப்பட்டிருந்தாலும் அது புத்தக வடிவத்தில் இதுவரை பதிப்பிக்கப்படவேயில்லை. பழைய புத்தக கடைகளில் தேடியும் கிடைக்காத அந்த நாவல்களில் ஒன்று நண்பர் கிங்விஷ்வாவிடமிருந்தது (காமிக்ஸ் புகழ் கிங்விஸ்வா).
கல்கி இதழில் 80ஆம் ஆண்டு எழுதிய உறவின் கைதிகள் என்னும் அந்த தொடர்கதையை யாரோ புண்ணியவான் பைண்ட் பண்ணி வைந்திருந்திருக்கிறார். அதை எங்கோ பழைய புத்தகங்கள் விற்கும் கடையில் தேடிப்பிடித்து அதிக விலை கொடுத்து வாங்கிவைத்திருந்தார் விஸ்வா.

நமக்கு தெரிந்த ஜெயலலிதா சிறுவயது முதலே கல்வியில் சிறந்து விளங்கியவர், எதற்கும் அஞ்சாதவர்,கொஞ்சம் முரட்டுத்தனமான அதே சமயம் வீரமான பெண் என்பதாக இருக்க.. நாவலை வாசிக்க தொடங்கியதுமே நமக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சிதான்! நமக்குத்தெரிந்த முரட்டு முதல்வர் அல்ல இதை எழுதியது! மனது முழுக்க காதலும் அன்பும் நிறைந்த ஒரு இளம்பெண்ணின் மனநிலையில் எழுதப்பட்டிருந்தது. காதலின் ஏக்கமும் தவிப்பும் காதலனுடனான அந்த நொடிகளின் உக்கிரமும் நாவலெங்கும் நிறைந்திருந்தது.

பெண்களை துச்சமென மதிக்கும் நடிகன், கல்லூரி மாணவி ஒருத்தியிடம் காதலில் விழுகிறான். அவளும் அவனை காதலிக்கிறாள்.. கர்ப்பமாகிறாள்.. பிறகுதான் இருவரும் தந்தை-மகள் என்பது தெரியவரை அதிர்ச்சியூட்டும் கிளைமாக்ஸ்! எண்பதுகளின் ஜெயகாந்தன் கதைகளினுடைய பாதிப்பில் எழுதப்பட்ட கதையாகவே இது இருக்கிறது. அப்படியே இருந்தாலும் இப்படி ஒரு அப்பா-மகள் உறவினை கேள்விக்குள்ளாக்குகிற கதையை எழுத முனையவே நிறையவே தைரியம் வேண்டும். அது ஜெவிடம் நிறையவே இருந்திருக்கிறது.
முதல் அத்தியாயத்தில் நடிகனின் அறிமுக காட்சியில் தொடங்கி இறுதிஅத்தியாயத்தில் அவனுடைய மரணம் வரை ஒரே மூச்சில் படித்துவிட முடியும். அவ்வளவு வேகமான எழுத்து நடை. படிக்கும் போது ஒருவேளை இதை அசோகமித்திரன் எழுதியிருப்பாரோ என்கிற ஐயமும் எழாமல் இல்லை. பல இடங்களில் கரைந்த நிழல்கள் சாயல்!

ஒரு அத்தியாயத்தில் நடிகன் மாணவியிடம் தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டு வர.. அவள் அழைக்க.. அந்த அத்தியாயம் முழுக்க இருவருக்குமான தொலைபேசி உரையாடல் மட்டும்தான். உரையாடல் என்றால் வசனங்கள் இல்லாமல் இருவருக்குமான மௌனமே நிறைந்திருப்பது அருமை. எழுத்தில் மௌனத்தை கொண்டுவருவது மிகவும் கடினம் என்பார்கள். அதே போல காதலின் தவிப்பையும் ஏக்கத்தினையும் கூட நன்றாகவே எழுதியிருக்கிறார்.

இந்நாவல் அவருடைய வாழ்க்கையின் அடிப்படையில் எழுதப்பட்டத்தாக சிலர் கூறினாலும் அப்படி எதையும் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு அழகான புனைவாகவே இது இருக்கிறது.

தொடர்கதை வடிவத்தில் எழுதப்பட்டிருந்தாலும் சுஜாதாவின் தொடர்கதைகளைப் போல ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் தேவையில்லாத டுவிஸ்ட்டோ அதிர்ச்சியோ இல்லாமல் மென்மையாக தொடர்ந்திருப்பது பிடித்திருந்தது. வாய்ப்புகிடைத்தால் அனைவருமே படிக்க வேண்டிய நாவல் இது. அம்மாவின் புகழ்பாடும் அதிமுகவினர் இதை புத்தகமாக கொண்டுவர முயற்சி செய்யலாம். கலைஞர் மட்டும்தான் எழுதுவாரா எங்க தலைவியும் இலக்கியம் படைச்சிருக்காங்க பாருங்க என மார்தட்டிக்கொள்ள உதவும். ஜெ குமுதத்தில் எழுதிய இன்னொரு நாவலை தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களிடமிருந்தால் கொடுத்து உதவலாம்.
http://www.athishaonline.com/2011/09/blog-post.html

சென்னை நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி?போதுமான வசதிகள் இல்லாத அவலம்

பயங்கரவாதிகள் மிரட்டல், டில்லி குண்டு வெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக தலைநகரான சென்னையில் செய்யப்பட்டுள்ள (?) பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமான அளவில் இல்லாததால், பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது.
நாட்டில் எந்த பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினாலும், சென்னை நகருக்கு உடனடியாக, "அலர்ட் மெசேஜ்' அனுப்பப்படுவது வழக்கம். மத்திய, மாநில உளவுத்துறைகளின் அறிக்கைகள் அடிப்படையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர காவல்துறை செய்து வருகிறது.முக்கிய வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், ரயில்நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் பயங்ரவாதிகளின் இலக்காக இருப்பதால், அப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.நகர் முழுவதும் வாகன தணிக்கையில் முழுவீச்சில் போலீசார் ஈடுபடுவதும் தொடர்கிறது. சென்னையில், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஆனால், இத்தகைய முக்கிய இடங்களில் பாதுகாப்பு முழுமையாக இல்லை என்பது காவல்துறையின் ஒரு சாராரே வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். பயங்கரவாதிகள் ஊடுருவினால் தடுக்க முடியுமா என்பதை தெரிந்து கொள்ளும்வகையில் நடக்கும் சிறப்பு "ஆபரேஷன்'களிலும் இந்த பாதுகாப்பு குறைபாடு விவகாரம் வெளிப்படையாக தெரிந்துள்ளது. இத்தகைய குறைபாடுகள் குறித்து வெளிப்படையான விவாதமோ, குறைகளை சரி செய்ய தேவையான நடவடிக்கைகளோ முழுமையாக எடுக்கப்படுவதில்லை.
முக்கிய இடங்களில் பாதுகாப்புகுறைபாடு இருப்பது போல், சென்னையில் உள்ள லாட்ஜ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், அதை எத்தனை பேர் பின்பற்றுகின்றனர் என்பதை தொடர்ந்து போலீசார் கண்காணிக்க வேண்டும்.மேலும், பொது தொலைபேசி மற்றும் இன்டர்நெட் மையங்கள் வாயிலாக நிறைய எச்சரிக்கைகள் மற்றும் வதந்திகள் பரப்பப்படுகின்றன. இங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இவை நடைமுறையில் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்ய வேண்டும். இதுபோன்றவற்றை கண்காணிப்பதற்கு தனிப்பிரிவு அமைத்தால், பாதுகாப்பு மேலும் பலப்படும். இதற்கான ஏற்பாடுகளும் பலவீனமாகவே உள்ளது.பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், சென்னை நகரின் பாதுகாப்பு விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டும். நவீன பாதுகாப்பு கருவிகளை போலீசாருக்கு வழங்குவதன் மூலமும், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.
இது குறித்து பேசிய பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர், ""நாட்டில் எந்த ஒரு அசம்பாவித சம்பவம் நடந்தாலும், தலைநகர போலீசார், "அலர்ட்' செய்யப்படுகின்றனர். முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, சோதனை நடத்தப்படுகிறது. வாகன சோதனையும் நடக்கிறது.போதுமான அளவில் போலீசார் இல்லாததால், இப்பணியில் முழுவீச்சில் ஈடுபட முடியாத நிலையும் ஏற்படுகிறது. அதே நேரத்தில், சோதனை உள்ளிட்ட போலீசாரின் நடவடிக்கைகள், குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை அச்சமடைய செய்யும். இதுவும் ஒருவகையான தடுப்பு நடவடிக்கையாகவே கருத வேண்டும்."மெட்டல் டிடெக்டர்' போன்ற கருவிகளை தாண்டி, நவீன கருவிகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், ஒரே நேரத்தில் பல இடங்களில், நவீன கருவிகளை பயன்படுத்துதல் என்பது சாத்தியமில்லாதது. அதே போல், இத்தகைய கருவிகளை கையாள்வது குறித்து, போதுமான பயிற்சிகளையும் வழங்க வேண்டியுள்ளது'' என்றார்.
தனியார் செயல்பாடு:காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் காட்டிலும், தனியார் ஓட்டல்கள், நிறுவனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாகவே உள்ளன. நட்சத்திர ஓட்டல்களில் உள்ளே நுழையும் கார்கள் அனைத்தும் சோதனைக்கு பின்பே அனுப்பப்படுகின்றன. தனிநபர்களும் சோதனைக்கு பின்பே அனுப்பப்படுகின்றன.பிரபல தனியார் வங்கிகள், தனியார் ஐ.டி., நிறுவனங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாகவே உள்ளன. பயங்கரவாத அச்சுறுத்தலின் தீவிரம் உணர்ந்து, இவர்கள் தாங்களாகவே பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மறைமுக பாதுகாப்பில் பின்தங்கியுள்ளோம்:சென்னையின் பாதுகாப்பு குறித்து ஓய்வு பெற்ற டி.ஜி.பி., நட்ராஜ் கூறியதாவது:பாதுகாப்பு என்பது இரண்டு வகை. வெளிப்படையான பாதுகாப்பு ஒன்று. மறைமுக பாதுகாப்பு ஒன்று. ரயில் மற்றும் பஸ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசாரை குவிப்பது. வாகன தணிக்கையில் ஈடுபடுவது வெளிப்படையான பாதுகாப்பு. தகவல்களை சேகரித்து அதனடிப்படையில் ஆராய்ந்து பாதுகாப்பை பலப்படுத்துவது என்பது மறைமுக பாதுகாப்பு. இந்த விஷயத்தில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம்.பொதுவாக, வழக்குகள் அடிப்படையில் தகவல்களை சேகரிக்க வேண்டும். சிறிய வழக்காக இருந்தாலும் சரி, அதிலும் நமக்கு நிறைய தகவல்கள் கிடைக்கும். இதற்கென கீழ்மட்டத்திலும் உயர் மட்டத்திலும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இப்போது இருக்கிற மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகளை, சரியான அளவில் டியூன் செய்ய வேண்டும். இதற்கென உள்ள மென்பொருள்களை பயன்படுத்த வேண்டும். சில இடங்களில் உயர் தொழில்நுட்பம் இல்லை என்றாலும் கூட, இவ்வாறான பாதுகாப்பை காணும் போது குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட நினைப்பவர்கள் அஞ்சுவார்கள்.இவ்வாறு நட்ராஜ் கூறினார்.
முக்கியமான இடங்களில் பாதுகாப்பு நிலை என்ன?
விமான நிலையம் : * இங்குள்ள "இன்லைன் ஸ்கேனர்' கருவி அடிக்கடி பழுதாவதால் சோதனையில் பெரும் பின்னடைவு ஏற்படுகிறது*"ரன்வே'யில் திடீரென யாராவது நுழைந்து ஓடுகின்றனர். பிடித்து விசாரித்தால், ஒன்று அவர்களை குடிகாரன் என்றோ அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றோ கூறி அந்த விஷயத்தை அத்தோடு முடித்து விடுகின்றனர்.*சமீபத்தில் கார்கோ விமானத்தில் நுழைந்த சிறுவனை பிடிக்க பெரும்பாடு பட்ட சம்பவம் நடந்துள்ளது.*வாகன நிறுத்துமிடங்களிலும் போதுமான கண்காணிப்பு கேமராக்கள் இல்லை.
சென்ட்ரல் ரயில் நிலையம்:* இங்கு பிரதான வாயில்களில் மட்டுமே பயணிகளின் உடமைகளை சோதனை செய்யும் ஸ்கேன் கருவி உள்ளது. புறநகர் ரயில் நிலையம் அருகேயுள்ள வாயில், தபால் பிரிவு உள்ளிட்ட வாயில்களில் கேமரா கூட இல்லை.*"பிரீபெய்ட்' ஆட்டோ நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா இல்லை. தொலைவில் அமைக்கப்பட்டுள்ள கேமரா மட்டுமே உள்ளது. இதன் மூலம் எந்தளவிற்கு துல்லியமாக கண்காணிக்க முடியும் என்பது கேள்விக்குறியே.* அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டால், பயணிகள் நுழைந்து செல்லும் மெட்டல் டிடெக்டர் கருவியில், "ப்யூஸ்' கட்டாகி செயல் இழந்து விடுகிறது.* புறநகர் ரயில் நிலையத்தையும் சேர்த்து 48 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. ஆனால் அவற்றில் சில பழுதாகி, இயங்காமல் உள்ளது.*வால்டாக்ஸ் சாலையில் உள்ள சரக்கு மையத்தில் கேமரா இல்லை. எக்ஸ்பிரஸ் ரயில்களில் வரும் பார்சல்கள் இங்கு தான் பிரித்து அனுப்பப்படுகிறது.*எந்த கண்காணிப்பு கேமராவிலும் பதியாமல், பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையம் வழியாக சுலபமாக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் வரக்கூடிய அளவிலேயே பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன.எழும்பூர் ரயில் நிலையம்*சென்ட்ரலை போலவே இங்கும் பல நுழைவாயில்கள் உள்ளன. அனைத்திலும் கண்காணிப்பு என்பது குறைவே.* மூன்று நுழைவாயில்களில் மட்டும் மெட்டல் டிடெக்டர் கருவி உள்ளது. அனைத்தும் காட்சி பொருளாக மட்டுமே உள்ளது.* கார் மற்றும் இருகர வாகன நிறுத்துமிடத்தில் கண்காணிப்பு கேமரா கூட இல்லைக்ஷ
கோயம்பேடு பஸ் நிலையம்:*பஸ்நிலையத்தின் பின்புறம் உள்ள, பஸ்கள் வந்து செல்லும் பகுதியில் எந்த கண்காணிப்பும் இல்லை. இங்கு பயணிகள் போர்வையில் யார் வேண்டுமானாலும், சுலபமாக நுழைந்து கோயம்பேடு பஸ்நிலையத்திற்குள் செல்லலாம்.* போதுமான போலீசார் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதில்லை.*சி.எம்.டி.ஏ., அமை த்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்தவர்களே மெட்டல் டிடெக்டரில் பயணிகளை சோதனை செய்கின்றனர். இவர்களுக்கு எந்தளவுக்கு அதில் திறமை உள்ளது என்பது கேள்விக்குறியே.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=312111

Thursday, September 8, 2011

How did this happen? Amazing Photos

How did this happen? Its a mystery, Simply Wow!

FunOnTheNet - What happened here!

FunOnTheNet - What happened here!
FunOnTheNet - What happened here!
FunOnTheNet - What happened here!
FunOnTheNet - What happened here!
FunOnTheNet - What happened here!
FunOnTheNet - What happened here!
FunOnTheNet - What happened here!
FunOnTheNet - What happened here!
FunOnTheNet - What happened here!
FunOnTheNet - What happened here!
FunOnTheNet - What happened here!
FunOnTheNet - What happened here!
FunOnTheNet - What happened here!
FunOnTheNet - What happened here!
FunOnTheNet - What happened here!
 
FunOnTheNet - What happened here!
FunOnTheNet - What happened here!

Tuesday, August 9, 2011

அதிகாலையில் சிகரெட் பிடித்தால் புற்று நோய் அதிகரிக்கும்

வாஷிங்டன், ஆக. 9-
 
 
பொதுவாக சிகரெட் பிடித்தால் புற்றுநோய் ஏற்படும் என்ற கருத்து பரவலாக உள்ளது. அதே நேரத்தில் அதிகாலையில் எழுந்தவுடன் சிகரெட் பிடிப்பவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகம் ஏற்படும் என தெரிய வந்துள்ளது.
 
அவர்களுக்கு நுரையீரல், தலை மற்றும் கழுத்து பகுதிகளில் புற்று நோய் பாதிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  
 
அமெரிக்காவில் ஹெர்சியில் உள்ள பென்ஸ்டேட் மருந்து கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் ஜோசுவா முஸ்கட் நடத்திய ஆய்வில் இது தெரியவந்தது.
 
அதிகாலை நேரத்தில் சிகரெட் பிடிப்பதால் அதில் உள்ள நிகோடின் மற்றும் புகையிலையின் நச்சு பொருட்கள் உடலில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பாட்னாவில் இரு கருப்பைகளில் தனித்தனியாக குழந்தைகளை பெற்ற பெண்

பாட்னா, ஆக.9-
 
பீகார் மாநிலத்தில், பாட்னாவின் வட பகுதியிலுள்ள மதுராபூர் சாகியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரிங்கு தேவி (வயது 28). சமீபத்தில் சிசேரியன் முறையில் ஒரே பிரசவத்தில் இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.
 
இதில் ஆச்சரியம் என்னவென்றால், இவருக்கு இயற்கையிலேயே இரு கருப்பைகள் உள்ளன. ஒவ்வொரு கருப்பையிலும் ஒரு சிசு வளர்ந்துள்ளது. இது மருத்துவ உலகில் 50 மில்லியன் பேருக்கு ஒருவர் என்ற வகையில் நிகழும் அதிசயமாகும்.
 
இந்த பிரசவத்தில் தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ ஆபத்து, குறைப்பிரசவம், கருச்சிதைவு ஏற்படுதல் மற்றும் எடை குறைந்த குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு ஆகிய சிக்கல்கள் உள்ளன.
 
தற்போது குழந்தைகள் ஒவ்வொன்றும் முறையே 1.5 மற்றும் 2 கி.கிராம் எடையுடன் நலமாக உள்ளனர். தாயும் நல்ல நிலையில் உள்ளார். ரின்குவிற்கு இது முதல் பிரசவம் அல்ல. 4 வருடங்களுக்கு முன்பே சுக பிரசவத்தில் அவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Monday, May 23, 2011

10 Sneaky Hidden Cameras

Here are ten super sneaky hidden cameras. From a belt camera to a tissue camera to even a toothbrush camera. Be Careful !
 
Belt Camera

Belt Hidden Camera
 
If you're aspiring to be a super secret spy at some point in your life then you'll need the equipment to go with the job. No one can be a true spy without the proper tools. Well Minox is selling a seemingly innocent belt that happens to have a hidden camera built into it. The belt can record videos, which will likely be every perv's dream. It doesn't only record videos, but it will record audio as well. Giving you handy blackmail material when needed. It records onto an SD card and includes a USB adapter.


Tissue Box Hidden Camera
 
Tissue Hidden Camera

BrickHouse presents a hidden camera which looks like an ordinary tissue box. This Tissue Box camera can record video clips with 720×480 resolution at 30fps. It is able to capture video footage in extreme low light environment.


Toothbrush Hidden Camera
 
Toothbrush Hidden Camera

Chinese manufacturers keep working hard to invent the craziest things. But a hidden camera disguised as an Oral-B electric toothbrush, is beyond creative. The $243 Pinhole Spy Toothbrush Hidden Camera records 640×480 video in AVI format, using its internal 8GB flash memory. According to their product site, it looks exactly like a real electric toothbrush.


Coca-Cola Can Hidden Camera
 
Coca Cola Hidden Camera

It looks like an ordinary Coca-Cola can, but it's also a Coca-Cola camera. Nobody will ever find out there are being recorded with that.


Cigarette Camera
 
Cigarette Hidden Camera

If you have young kids and you leave with childcare during the day, you've probably thought of your children on many occasions, just wondering about the quality of daycare the caregiver provides. Surveillance companies have built a big business on this fear with the release of all kinds of hidden cameras. The SDHCC pinhole hidden camera that resides within a cigarette box allows you to keep active watch on your caregiver as they interact with your child. The camera captures clear, colored video which can be transmitted to any monitor or TV set via the included receiver. There is also an option to record the footage to a VCR or DVD player with record capabilities.


Shoe Camera
 
Shoe Hidden Camera

This 2.4GHz Wireless Shoe Covert Camera is really pushing the boundaries. It comes in two parts, the covert camera with a 2.4GHz transmitter which resides in a shoe or similar and the fully working tri-band, 3″ GSM cell phone which receives the camera signal and records it. The phone has 1Gb of built-in storage and the camera can broadcast out to about 50 metres. Thankfully it's US$329 so no one will buy it.


Lighter Camera
 
Lighter Hidden Camera

This lighter camera uses brand new technology to capture highly-detailed videos with incredibly clear video compress file sizes. After all, it wouldn't be terribly stealthy stopping in the middle of a "mission" to insert another memory card, would it? Of course not. Because it's built in 4GB memory so no need to insert another memory card. Sneaking a video indoors is also inconspicuous thanks to Omejo Technology which allows you to take clear videos in day light without using a flash.


Telephone Spy Camera
 
Phone Hidden Camera

This gadget, the Motion Detector Telephone, it is not only a funny toy but it will help you to keep your place more safe. It has a built- in sensor which will detect every move from the room and highlight its author. The best part at this cool telephone is that it will call to a preset number every time when the alarm is activated and it will detect a moving presence. Its range is about 30 feet long and has a width of 20 feet.


Necktie Spy Camera

Tie Hidden Camera
 
Let's face it, the only things that you will probably end up capturing on this hidden camera will be people photocopying, sitting in cubicles, making coffee and occasionally pilfering some office supplies. Or if you are smart, you could take all of your colleagues out for drinks, get them talking about the boss and use it to leverage your way to the top. It holds 2GB of video and connects to your computer via USB.


Air Freshener Hidden Camera

Bottle Hidden Camera
 
You could expect a camera hidden in thousands of places, but would you ever suspect from a harmless bathroom air freshener? That's exactly what Omejo Company thought before developing this ultra-small digital spy camera that looks like an ordinary Air Freshener, but it has a very powerful function, the most interest is that internally it hides a smallest camera DVR , it does not need any external plug-in card, built in memory 8GB itself, and can work up to 4-5hours. There is time date stamp for the record, and you can get the most authentic evidence for a variety of illegal behaviour.

Friday, May 20, 2011

In the tunnel (animation)

USB Typewriter

Something for the old-fashioned types? How you can use a typewriter to work on your PC

By Daily Mail Reporter
Last updated at 11:04 AM on 18th May 2011

Maybe the typewriter isn't dead just yet.
A U.S. designer has created a USB Typewriter conversion kit that allows computer users to type on their machines using an old-school typewriter keyboard.
The kit plugs into the USB port on a laptop, monitor or iPad via a sensor board.
Scroll down for video
Retro: U.S. designer Jack Zylkin has created this USB Typewriter 
conversion kit that allows computer users to type on their machines 
using an old-school typewriter keyboard Retro: U.S. designer Jack Zylkin has created this USB Typewriter conversion kit that allows computer users to type on their machines using an old-school typewriter keyboard
Inventor Jack Zylkin said: 'It's a new and ground-breaking innovation in the field of obsolescence.'
Mr Zylkin sells complete kits, which include the typewriter itself, on retail website Etsy.com.
 

They retail for between $699 and $899 depending on the model. Mr Zylkin also sells do it yourself kits, starting at $74.
The modification is 'easy to install,' according to a statement on usbtypewriter.com.
Costly: Mr Zylkin sells complete kits, which include the 
typewriter itself on website Etsy.com which retail for between $699 and 
$899 depending on the model Costly: Mr Zylkin sells complete kits, which include the typewriter itself on website Etsy.com which retail for between $699 and $899 depending on the model

'It involves no messy wiring, and does not change the outward appearance of the typewriter (except for the usb adapter itself, which is mounted in the rear of the machine),' the statement continues.
The high-tech typewriters are marketed to 'lovers of the look, feel, and quality of old fashioned manual typewriters,' who can now use them as keyboards for any USB-capable computer.
The machine, introduced in July of 2010, has since become a hit with retro-style aficionados, receiving 100 per cent positive feedback on Etsy.com.
One user commented on the brand's website: 'I know several people who at least claim to be nostalgic for the old typewriter days; this would make it possible to call their bluff :-) . And who knows, they might actually like it?'
Cheaper alternative: A DIY modification that retails for $74 is 
'easy to install,' according to a statement on usbtypewriter.com Cheaper alternative: A DIY modification that retails for $74 is 'easy to install,' according to a statement on usbtypewriter.com

Thumbnail

USB Typewriter

Tuesday, May 17, 2011

சட்டசபை தேர்தலில் கறுப்பு பணம் தமிழகத்தில் 85 சதவீதம் பறிமுதல்

சென்னை : ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களின் போது, தேர்தல் கமிஷனால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில், 85 சதவீதம் தமிழகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம், மேற்குவங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி சட்டசபை தேர்தல்களின் போது, கணக்கில் காட்டாமல், நடமாட்டத்தில் இருந்த, மொத்தம் 70 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இம்முறை, தேர்தல் கமிஷனுடன் இணைந்து வருமான வரிதுறையும், இந்த நடவடிக்கையில் கண்டிப்புடன் நடந்து கொண்டது.
ஐந்து மாநிலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில், தமிழகத்தில் இருந்து மட்டும் 60 கோடி ரூபாயும், கேரளாவில் இருந்து 65 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, நாடு முழுவதிலும் இருந்து 100 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், ஆந்திரா, தமிழகம், கர்நாடகா மாநிலத்தில் இருந்து அதிகளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தெரிய வந்தது.
இம்முறை, தேர்தல் கமிஷன் கடுமையான நடவடிக்கை எடுத்ததால், திருமணத்திற்கு செக் கொடுத்தது, திருமணத்திற்கு பொருட்கள் வாங்கிய போது பில் செலுத்தியது, மருத்துவ பில் செலுத்தியது, செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்தது, கொரியரில் பணம் அனுப்பியது, பொருட்கள் வாங்க பல்வேறு கலர்களில் டோக்கன் வழங்கியது என திரைமறைவுக்கு பின் பல்வேறு செயல்களில் ஈடுபட்டது, அன்றாட செய்தியாக வெளியானது.
ஆம்புலன்சில், போலீஸ் வேனில், பயணிகள் பஸ்சில் என இம்முறை கடத்திய பணம் கைப்பற்றப்பட்டது. இதற்கு காரணம், மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு. தேர்தல் கமிஷன், "எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம்' என்று தொலைபேசி எண் வழங்கியிருந்ததும், பண நடமாட்டத்தை கட்டுப்படுத்த உதவியது.
இதுகுறித்து, தேர்தல் கமிஷன் தலைவர் பிரவீன் குமார் கூறுகையில், "தமிழகத்தில் வீட்டுக்கு ஒரு போலீஸ் பாதுகாப்பு அளித்தாலும், பண நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது கடினம்' என்று கூறினார்.
மேற்குவங்க முதல்வராக பதவி ஏற்க இருக்கும் மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தின் போது, "ஆளும் கட்சியினர் பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள், அது உங்களுடைய பணம். ஆனால், சிந்தித்து வாக்களியுங்கள்' என்றார்.
அதுதான், தமிழகத்திலும் நடந்தது. அப்படியே தமிழக மக்கள் பணம் வாங்கியிருந்தாலும் தப்பில்லை. அது தமிழக மக்களின் பணம்.

Thursday, May 12, 2011

ஐ.ஏ.எஸ்., 2010 இறுதித்தேர்வு முடிவு வெளியீடு; தமிழக மாணவர்கள் அபார சாதனை

சென்னை:ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான இறுதிக்கட்ட தேர்வில், தமிழக மாணவர்கள் அபார சாதனை படைத்துள்ளனர். நேற்று வெளியான தேர்வு முடிவில், அகில இந்திய அளவில் முதல் மூன்று இடங்களை தமிழக மாணவர்கள் பிடித்ததுடன் இல்லாமல், ஒட்டுமொத்தத்தில் 100க்கும் மேற்பட்டோர் தேர்வு பெற்று சாதித்துள்ளனர்.

மத்திய தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) ஆண்டுதோறும், ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்காக, அகில இந்திய அளவில் போட்டித் தேர்வுகளை நடத்தி, தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. இந்த தேர்வுகளில், வழக்கமாக, வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களே அதிகளவில் தேர்வு பெறுவர். வட மாநிலங்களில், ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட தேர்வுகளுக்கு அதிகளவில் பயிற்சி மையங்கள் இயங்கி வருவதும், அவர்கள் தாய்மொழியான இந்தியில் தேர்வெழுதும் வாய்ப்பும், அதிகளவில் வெற்றிபெற வழி வகுக்கிறது. இத்தகைய பயிற்சி மையங்கள், அதிகளவில் தமிழகத்தில் இல்லாதது குறையாக இருந்தது. சென்னையில் உள்ள அண்ணா ஐ.ஏ.எஸ்., அரசு பயிற்சி மையம் மட்டும், மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்த நிலையில், இத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில், சைதை துரைசாமி மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் உட்பட பல பயிற்சி மையங்கள் தோன்றியபின், தமிழக மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெற்று வருகின்றனர்.கடந்த ஆண்டுக்கான தேர்வுக்கு, நாடு முழுவதும் ஐந்து லட்சத்து 47 ஆயிரத்து 698 பேர் விண்ணப்பித்தனர். இதில், கடந்த ஆண்டு மே மாதம் நடந்த முதல் நிலைத் தேர்வில், 2 லட்சத்து 69 ஆயிரத்து 36 பேர் கலந்து கொண்டனர். மெயின் தேர்வில், 12 ஆயிரத்து 491 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் இருந்து, 2,589 பேர் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு பெற்றனர். நேர்முகத் தேர்வு முடிவுகளை, நேற்று யு.பி.எஸ்.சி., வெளியிட்டது. நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டவர்களில் இருந்து, 920 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முதல் மூன்றிடத்தில் தமிழகம் சாதனை:இதில், தமிழகத்தில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் தேர்வு பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் முதல் மூன்று இடங்களையும், தமிழக மாணவர்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர். முதலிடம் பிடித்த திவ்யதர்ஷினி, அம்பேத்கர் பல்கலையில் பி.ஏ.,-பி.எல்., ஹானர்ஸ் முடித்தவர். இரண்டாவது முயற்சியில், இவர் இத்தகைய சாதனையை செய்துள்ளார்.

இரண்டாவது இடம், சுவேதா மொகந்தி என்பவருக்கு கிடைத்துள்ளது. இவர், ஐதராபாத்தில் உள்ள நேரு தொழில்நுட்ப பல்கலையில், பி.டெக்., (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படித்துள்ளார். மூன்றாவது முயற்சியில், இவர் வெற்றி பெற்றுள்ளார்.

சைதை துரைசாமி மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் படித்த டாக்டர் வருண்குமார், தேசிய அளவில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். இவர், சென்னையில் உள்ள ராகாஸ் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ்., படித்துள்ளார்.இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 90 பேரில், 36 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், 29 பேர் மாணவர்கள்; ஏழு பேர் மாணவியர். இந்த மையத்தில் பயின்ற அரவிந்த், அகில இந்திய அளவில் எட்டாவது இடமும், ராகப்பிரியா 28வது இடமும், மீர் முகமது 59வது இடமும், டாக்டர் கார்த்திகேயன் 118வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். சீனிவாசன் என்ற மாணவர், முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றிருக்கிறார்.

போலீஸ் அதிகாரி மகன் சாதனை: சென்னை, போலீசில் கூடுதல் துணைக் கமிஷனர் அசோக் என்பவர் மகன் டாக்டர் அருண். இவர், முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பள்ளிப்படிப்பை சென்னையில் டான்போஸ்கோ பள்ளியில் முடித்தார். முதல் வகுப்பில் இருந்து, பிளஸ் 2 வரை அனைத்திலும், முதல் ரேங்க் பெற்றுள்ளார். மாநில அளவில் போலீசாரின் பிள்ளைகளில் பிளஸ் 2வில் முதலிடம் பிடித்துள்ளார். இதனால், மருத்துவப் படிப்புக்கான, முதல்வரின் ஸ்காலர்ஷிப் இவருக்கு கிடைத்தது.மருத்துவக் கல்லூரியில் முதல் மாணவராக தேறிய இவர், மருத்துவ அறுவை சிகிச்சையில் தங்கம் வென்றுள்ளார். தற்போது, ஐ.ஏ.எஸ்., தேர்விலும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

சென்னை அண்ணா நகரில் இயங்கிவரும் அண்ணா அகில இந்திய குடிமைப்பணி தேர்வு மையத்தின் சார்பில், (தமிழக அரசு) 144 பேர், நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர். இவர்களில், 48 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தின், மேலும் சில மையங்களில் இருந்து பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டு மொத்தத்தில், தமிழகத்தில் இருந்து 122 பேர் தேர்வு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு அதிகளவில் தேர்ச்சி பெற்று, தமிழக மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ஊழலை ஒழிப்பேன்: முதலிடம் பெற்ற மாணவி பேட்டி : ஐ.ஏ.எஸ்., தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற மாணவி திவ்யதர்ஷினி, சென்னை நுங்கம்பாக்கம், ஜெயலட்சுமிபுரத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சண்முகம்; சுங்கத்துறையில் ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு ஆலோசகராக இருக்கிறார். தாய் பத்மாவதி. சகோதரி பிரிதர்ஷினி. சகோதரர் கோகுல்; மரைன் இன்ஜினியராக இருக்கிறார்.

திவ்யதர்ஷினி கூறியதாவது: சட்டப்படிப்பை முடித்த நான், எம்.சி.ஏ., முடித்து, சாப்ட்வேர் துறையில் பணியாற்றி வருகிறேன். ஐ.ஏ.எஸ்., தேர்வில், "பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன்' பிரிவை தேர்ந்தெடுத்து படித்தேன். இரண்டாவது முயற்சியில், ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றேன். அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது, மிகவும் மகிழ்சியாக இருக்கிறது. பிரபா ஐ.ஏ.எஸ்., அகடமியின் இயக்குனர் பிரபாகரன் கொடுத்த ஊக்கம், இந்தளவிற்கு சாதனை செய்ய வைத்துள்ளது.நேர்மையாக செயல்பட்டு, ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே, ஐ.ஏ.எஸ்.,க்கு படித்தேன். எனது தந்தையின் விருப்பமும் இதுவே.இவ்வாறு திவ்யதர்ஷினி கூறினார்.

புதுச்சேரியைச் சேர்ந்த ராஜீவ் கார்க் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி : மத்திய தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் புதுச்சேரி லாஸ்பேட்டை அவ்வை நகர் 17வது குறுக்கு தெரு சன் ரைஸ் குடியிருப்பைச் சேர்ந்த கார்க் மகன் ராஜீவ் கார்க், 143 இடத்தைப் பிடித்து சாதித்துள்ளார். இவருடைய பெற்றோர் கார்க், அஞ்சு, தம்பி நிர்பே ஆகியோர் ராஜீவ் கார்க் சிவில் சர்வீசஸ் தேர்வெழுத உறுதியாக இருந்துள்ளனர்.

வெற்றி குறித்து ராஜீவ் கார்க் கூறியதாவது:பெத்திசெமினர் மேல்நிலைப்பள்ளியில், 2004ம் ஆண்டு பிளஸ் 2 முடித்தேன். 2008 ஆண்டு புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் இ.சி.இ., படிப்பில் சேர்ந்தேன். புதுச்சேரி பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றேன்.சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறுவதே எனது குறிக்கோளாக இருந்தது. இதனால் பல இடங்களில் இருந்து அழைப்பு வந்தும் வேலைக்குச் செல்லவில்லை. கல்லூரியில் நடந்த எந்த கேம்பஸ் இன்டர்வியூவிலும் கலந்து கொள்ளவில்லை. கடந்த முறை சிவில் சர்வீசஸ் எழுதிய போது வாய்ப்பை தவறவிட்டு விட்டேன். இம்முறை அப்படி நடந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.முதல் தோல்வி நல்ல அனுபவத்தைக் கொடுத்தது. இன்ஜினியரிங் படித்திருந்தாலும், நாட்டைப் பற்றி அறிந்து கொள்ள பொது நிர்வாகம், புவியியல் ஆகியவற்றை முதன்மை பாடங்களாக எடுத்து படித்தேன். முதன்மை பாடங்களோடு தொடர்புடைய நிறைய புத்தகங்களையும் படித்தேன். தேர்வில் வெற்றி பெறவேண்டும் என டில்லிக்குச் சென்று வாஜிம்ராம் சென்டரில் ஸ்பெஷல் கோச்சிங் எடுத்தேன். நேர்காணலில் சிறப்பாக செயல்பட்டதால் எனது சிவில் சர்வீசஸ் கனவு நனவாகிவிட்டது.நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என்பதே என்னுடைய இளம் வயது தாகம். அதற்கு சரியான வழித்தடம் சிவில் சர்வீசஸ் தேர்வுகள் தான். அதனால் இந்த வழியினை தேர்ந்தெடுத்து வெற்றிப் பெற்றேன். வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தைக் கொடுப்பதே எனது பணியாக இருக்கும். சிவில் சர்வீசஸ் தேர்வெழுத இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் முன்வர வேண்டும்.இவ்வாறு ராஜீவ் கார்க் கூறினார்.

* தேர்வு பெற்ற 920 பேரில், 28 பேர் உடல் ஊனமுற்றவர்கள்.
* ஐந்து பேர், பார்வையற்றவர்கள்; 9 பேர், காது கேட்காதவர்கள்.
* "டாப்' 25 பேரில், 8 பேர், முதல் முயற்சியிலேயே தேர்வு பெற்றுள்ளனர். 4 பேர், இரண்டாவது முயற்சியிலும், 9 பேர், மூன்றாவது முயற்சியிலும், 3 பேர், நான்காவது முயற்சியிலும் வெற்றி பெற்றுள்ளனர். "டாப்' 25 பேரில், 20 பேர் ஆண்கள்; 5 பேர் பெண்கள்.
15 பேர், பொறியியல் பட்டதாரிகள். 5 பேர், வணிகவியல் பட்டதாரிகள். 5 பேர், மருத்துவ பட்டதாரிகள்.

Monday, May 9, 2011

உலக வரலாறு படைத்த மேற்குவங்க சபாநாயகர்

மேற்குவங்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது சாரி கூட்டணி, தொடர்ந்து, 34 ஆண்டுகள் ஆட்சியில் நீடித்ததை போல, அம்மாநில சபாநாயகர் ஹசிம் அப்துல் கலிம், 1982, மே 6ம் தேதியில் இருந்து, தொடர்ந்து, 29 ஆண்டுகள், இடது சாரி கூட்டணி ஆட்சிக்கு சபாநாயகர் பதவி வகித்தார்.
இதன் மூலம், உலகிலேயே, அதிக ஆண்டுகள், சபாநாயகராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஹசிம் அப்துல் கலிம். மேற்குவங்கத்தில், நடப்பு தேர்தலில், ஆட்சி மாற்றம் இருக்கலாம் என்று அரசியல் வல்லுனர்கள் கூறி வரும்போது, "போதும் இந்த வருத்தம் அளிக்க கூடிய சபாநாயகர் வேலை' என்கிறார்.
மேற்குவங்க சட்டசபை தேர்தலுக்கு முன், கடைசியாக நடந்த சட்டசபை கூட்டத்தில் கவலை தோய்ந்த முகத்துடன் அப்துல் கலீம் பேசினார். சபாநாயகர் பணி குறித்து இவர் கூறியதாவது: கடந்த, 29 ஆண்டுகால சபாநாயகர் பணியில், முன்னாள் பிரதமர்கள் இந்திரா, ராஜிவ், மறைந்த மேற்குவங்க முன்னாள் முதல்வர்கள் அனைவருக்கும் இரங்கல் தீர்மானம் கொண்டு வந்துள்ளேன். என்னுடன், நெருங்கிய உறவு வைத்திருந்த, அரசியல் தலைவர்கள் இறந்த போது, இரங்கல் தீர்மானம் கொண்டு வந்துள்ளேன். அப்போது என் மனம் பாரமாக இருந்தது.
மாற்றம் தேவை என்று மக்கள் கூறி வருகின்றனர். மாற்றம் என்பது ஒரு தொடர்கதை. 2000வது ஆண்டில், முதல்வர் பதவி ஜோதி பாசுவிடம் இருந்து, புத்ததேவ் கைக்கு மாறியது. 1977ம் ஆண்டில் இருந்து கிராமங்கள், நகரங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆனால், இன்னும் அதிக மாற்றம் தேவைப்படுகிறது. அடுத்த முறை, யார், மேற்குவங்க எம்.எல்.ஏ.,க்களாக வருகிறார்களோ, அவர்கள், மாநிலத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
மாற்றம் என்பது மக்களுக்காக, ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். என் பதவி காலத்தில், சட்டசபையில், 158 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பெண்கள் பாதுகாப்பு, விதவைகள் மற்றும் வேலையில்லா இளைஞர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை ஆகியவை முக்கியமானவை. நாட்டிலேயே, மேற்குவங்க மாநிலத்தில் தான், முதன் முறையாக, ஓட்டு போடும் வயதை, 18 ஆக, சட்டத்தின் வாயிலாக கொண்டு வரப்பட்டது. முதுமை காரணமாக இனி தேர்தலில் போட்டியிட்டு, சபாநாயகர் பதவி வகிக்க விரும்பமில்லை. அடுத்தது, இடது சாரி ஆட்சி அமைந்தாலும், நான் சபாநாயகராக பொறுப்பு ஏற்க போவதில்லை. இவ்வாறு அப்துல் கலீம் கூறினார்.
சபாநாயகராக இருந்தாலும், இவர் அரசியல் சர்ச்சைக்கு உட்பட்டவர் தான். இவர் குறித்து திரிணமூல் கட்சி எம்.எல்.ஏ., பார்த்தா சாட்டர்ஜி கூறும்போது, "நந்திகிராமில், 14 பேர், போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக, எங்கள் கட்சி, இரங்கல் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கேட்டது. ஆனால், சபாநாயகர் ஒப்பு கொள்ளவில்லை. பாரபட்சத்துடன் நடந்து கொண்டார்' என்கிறார். அதே நேரத்தில், "சட்டசபை என்ற கப்பலை, பல முறை மூழ்கடிக்க நடந்த முயற்சிகளை முறியடித்து, திறமையாக கப்பலை சபாநாயகர் ஓட்டி சென்றார்' என்று, இவருக்கு, முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா புகழாரம் சூட்டுகிறார்.

60 ஆயிரம் மாணவர்கள் பெயில் ஆயினர்; மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

சென்னை: பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் தேர்வு எழுதியவர்களில் 6 லட்சத்து 15 ஆயிரத்து 590 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தேர்வு எழுதிய மாணவர்கள் 58 ஆயிரத்து 887 பேர் பெயில் ஆகியுள்ளனர். மாணவிகள் பெயிலானது மொத்தம் 42 ஆயிரத்து 63 பேர் . கடந்த ஆண்டை தேர்ச்சி விகிதம் மிதமாக உயர்ந்திருந்தாலும், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

இன்றயை ரிசல்ட்டில் மாணவியே முதலிடத்தை பிடித்து அபார சாதனை படைத்துள்ளார். விழுப்புரம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணவன் வேல்முருகன் இரண்டாமிடத்தை பிடித்தார். 3 வது இடத்தை மாணவ, மாணவிகள் 4 பேர் பிடித்துள்னர்.

3 வது இடத்தை பிடித்த 4 பேர்: வித்தியா சகுந்தலா ( எஸ்.‌ஜே.எஸ்.எஸ்.,‌ஜே மெட்ரிக்., பள்ளி , மகாராஜநகர் , திருநெல்வேலி) ரகுநாத் (டி.எச்.எம்.என்.யு., மேல்நிலப்பள்ளி முத்துதேவன் பட்டி பெரியகுளம்), சிந்துகவி (குறிஞ்சி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி நாமக்கல்) , பி.எஸ்., ரேகா (ஸ்ரீ விஜய்வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலப்பைள்ளி ஓசூர்). இந்த நான்கு பேரும் ஆயிரத்து 186 மார்க்குகள் பெற்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒசூர் விஜய்வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ரேகா என்பவர் ஆயிரத்து 190 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். கணிதத்தில் 2 ஆயிரத்து 720 பேர் 200க்கு 200 மார்க்குகள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பாடவாரியாக 200க்கு 200 மார்க்குகள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு: இயற்பியல் : 646, உயிரியியல்: 615 , வணிகவியல்: ஆயிரத்து 166, வேதியியல்: ஆயிரத்து 243 பேர். கம்ப்யூ., சயின்சில் 223 பேர், தவாரவியலில் 14 பேர் விலங்கியலில் யாரும் 200க்கு 200 மார்க்குகள் பெறவில்லை.

தமிழ் மொழிப் பாடத்தில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் பட்டியல் : விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., அகடெமி மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்கள் தமிழில் மாநில அளவில் முதல் 3 இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். மாணவன் கோகுலகிருஷ்ணன் 198 மார்க்குகள் பெற்றுள்ளார். அவரது மொத்த மதிப்பெண் 1172. 2வது இடம் பிடித்த மாணவர் எஸ். மகேஸ்வரன் 198 மதிப்பெண்கள் தமிழில் பெற்றுள்ளார். அவரது மொத்த மார்க்குகள் 1156. 3வது இடம் பிடித்த மாணவர் தினகரன் . எம். தமிழில் 198 மார்க்குகள் பெற்றுள்ளார். அவரது மொத்த மதிப்பெண் 1144 ஆகும்.


இன்று வெளியான பிளஸ் 2 தேர்வில் முதலிடத்தை மாணவியும், இரண்டாவது இடத்தை மாணவியும் பிடித்தனர். வழக்கம்போல் மாணவிகளே முந்தி நிற்கின்றனர். இந்த முறை மாணவன் 2 வது இடத்தை பிடித்துள்ளார் . ஆனாலும் தேர்வு எழுதிய 3 லட்சத்து 33 ஆயிரத்து 84 மாணவர்களில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 197 பேர் தேர்ச்சி ( 82. 3 சதம் ) பெற்றுள்ளனர். பெயிலான மாணவர்கள் 58 ஆயிரத்து 887 பேர். மாணவிகளில் தேர்வு எழுதிய மொத்தம் 3 லட்சத்து 83 ஆயிரத்து 459 பேர்களில் 3 லட்சத்து 41 ஆயிரத்து 396 (89.0 சதம்) பேர் வெற்றி பெற்றுள்ளனர்.பெயிலான மாணவிகள் 42 ஆயிரத்து 063 பேர். ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம், கடந்த ஆண்டை(85.15%) விட ( 85.9 சதம்) அதிகரித்துள்ளன.

+2ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் யூனியன் பிரதேசமான புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தேர்ச்சி விகிதம் 83.54 சதவீதமாக பதிவாகி உள்ளதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஜி. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அவர்‌ மேலும் கூறு‌கையில், 11428 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 9547 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச் 2 முதல், 25ம் தேதி வரை, பிளஸ் 2 தேர்வுகள் நடந்தன. பள்ளிகள் சார்பில், ஏழு லட்சத்து, 23 ஆயிரத்து, 545 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வு வகையில், 57 ஆயிரத்து, 86 மாணவர்களும் தேர்வெழுதினர். ஆயிரத்து,890 மையங்களில் தேர்வுகள் நடந்தன.

மாணவர்கள் ஆவலுடன் எதிர்பர்த்த இந்த முடிவுகளை இன்று காலை 9.00 மணிக்கு கல்வி துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டார். இதே நேரத்தில், அந்தந்த பள்ளிகளில், மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளும் ஒட்டப்பட்டன.

" இலக்கு நிர்ணயித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம் '' 3 வது இடத்தை பிடித்த மாணவர் பேட்டி

தேனி: ""அனைவரும் ஒரு இலக்கை நிர்ணயித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்,'' என மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற மாணவர் ரகுநாத் தெரிவித்தார்.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ரகுநாத், 1,186 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்றார். கம்ப்யூட்டர் சயின்ஸ், பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில் 200 க்கு 200 மதிப்பெண்களும், கணக்குபதிவியல்- 199, தமிழ்- 196, ஆங்கிலம்-191 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.இவரது தந்தை நாகேஷ்வரன், அங்குள்ள மெர்க்கன்டைல் வங்கியில் மேலாளராக உள்ளார். தாய் அனுசுயா, தம்பி ரோகித் ஆகியோர் உள்ளனர்.
வெற்றி குறித்து ரகுநாத் கூறியதாவது:எப்போதுமே ஒரு இலக்கை நமக்கு நாமே நிர்ணயித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். எப்படியும் 98 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து படித்தேன். பள்ளியில் ஆசிரியர் நடத்தும்போதே கவனமாக கேட்டு புரிந்துகொள்வேன். வீட்டில் வந்து அன்று நடத்திய பாடங்களை அன்றே படித்து முடித்து விடுவேன். அப்பா எதற்காகவும் கண்டிக்க மாட்டார். அவ்வப்போது சில ஆலோசனைகளை வழங்கினார். நான் எதற்கும் டென்ஷன் ஆகமால் இருப்பேன். அம்மா எனக்கு தியானம் சொல்லி கொடுத்தார். பள்ளியில் ஆசிரியர்கள் நல்ல பயிற்சி அளித்தனர். இரவு 8 மணி வரை கூட சிறப்பு வகுப்புகள் நடத்தி படிக்க வைத்தனர். பி.ஏ., பொருளாதாரம் படிக்க உள்ளேன். அதன் பிறகு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றிபெறுவேன், என்றார்

சாதனை படைத்தவர்களுக்கு சேவை செய்ய விருப்பம்: பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்கள் பெரும்பாலானோர் டாக்டராகி மக்களுக்கு சேவை செய்யவே விரும்புவதாக தங்களது பேட்டியில் தெரிவித்துள்ளனர். இன்றைய தேர்வு முடிவில் ஓசூர் விஜய் வித்யாலயா மெட்ரிக் மேலநிலைப்பள்ளி மாணவியான ரேகா ஆயிரத்து 190 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இவரது தந்தை திரு.கேசவன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தாயார் மலர்விழி, நடுநிலைப்பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறார். ரேகாவின் தங்கை கிருத்திகா. இவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

மாணவி ரேகா பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் : தமிழ் : 195 ; ஆங்கிலம் - 195; கணிதம் - 200; இயற்பியல் - 200; வேதியியல் - 200, உயிரியல் - 200.

விழுப்புரம் மாணவன் இரண்டாமிடம் : விழுப்புரம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பாரதி மெட்ரிக்., பள்ளி மாணவன் வேல்முருகன் ஆயிரத்து 187 மார்க்குகள் பெற்று இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.

3 வது இடத்தை பிடித்த 4 பேர் : வித்தியா சகுந்தலா ( எஸ்.‌ஜே.எஸ்.எஸ்.,‌ஜே மெட்ரிக்., பள்ளி , மகாராஜநகர் , திருநெல்வேலி) ரகுநாத் (டி.எச்.எம்.என்.யு., மேல்நிலப்பள்ளி முத்துதேவன் பட்டி பெரியகுளம்), சிந்துகவி (குறிஞ்சி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி நாமக்கல்) , பி.எஸ்., ரேகா (ஸ்ரீ விஜய்வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலப்பைள்ளி ஓசூர்). இந்த நான்கு பேரும் ஆயிரத்து 186 மார்க்குகள் பெற்றுள்ளனர்.

கனவு நனவானது மாணவி ரேகா பேட்டி : பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற ஓசூர் விஜய வித்யாலயா பள்ளி மாணவி ரேகா அளித்த பேட்டியில் : தனது கனவு நனவானதாக மகிழ்ச்சி தெரிவித்தார். தனது வெற்றிக்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பும், பெற்றோர்கள் மற்றும் சகோதரி அளித்த ஊக்கமும் பெரும் உதவியாக இருந்ததாக தெரிவித்தார்.

இதய சிறப்பு டாக்டராக சிந்துகவிக்கு ஆசை: 3வது இடத்தை பிடித்த நாமக்கல் குறிஞ்சிபாடி மேல்நி‌லைப்பள்ளி மாணவி பி.சிந்துகவி நான்கு பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்கள் உட்பட 1186 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3 வது இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பிடித்தார். இது குறித்து அவர் கூறியதாவது,

மாநில அளவில் 3வது இடம் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. படிக்கும் போது டி.வி., பார்க்க மாட்டேன். நன்றாக படித்ததால் தான் என்னால் இவ்வளவு மதிப்பெண் பெற முடிந்தது. எதிர்காலத்தில் ஒரு பெரிய டாக்டராகி கார்டியாக்(இருதய அறுவை சிகிச்சை) பிரிவில் நிபுணராகி, ஏழை மக்களுக்கு சேவை செய்‌ய வேண்டும். அதுவே எனது லட்சியம் என்று கூறியிருக்கிறார். சிந்துகவி கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த பஞ்சலிங்கம், லோகநாயகி ஆகி‌யோரின் ஒரே மகள் ஆவர். நாமக்கல்லில் விடுதியில் தங்கி படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லை மாணவிக்கும் டாக்டராகத்தான் ஆசை: நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை ஸ்ரீ ஜெயந்திரர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி வித்யா சகுந்தலா மூன்று பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் உட்பட 1186 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3ம் இடத்தை பிடித்தார். வித்யா சகுந்தலாவின் தந்தை தனுஷ்கோடி ஸ்ரீவைகுண்டத்தில் குமரகுருபர் கலைக் கல்லூரியில் பேராசிரியாக உள்ளார். அதுபோல அவரது தாயார் விஜயஜானகியும் திருநெல்வேலி ஸ்கேர் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார்.

3ம் இடம் பிடித்தது குறித்து வித்யா சகுந்தலா கூறியதாவது, தினமும் காலை 4.30மணிக்கே எழுந்து படிக்க தொடங்கிவிடுவேன். அதுபோல் இரவு 11.30 மணி வரை படிப்பேன். ப்ளஸ்2 படித்ததால் வீட்டில் கேபிள் டி.வி., கிடையாது. நன்றாக படித்ததால் என்னால் இந்த மதிப்பெண்களை பெற முடிந்தது. எதிர்காலத்தில் டாக்டராக வர வேண்டும் என்‌பதே என்னுடைய ஆசை.


பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை, "தினமலர்' இணையதளத்தில் மாணவர்கள் உடனடியாக பார்த்து தெரிந்து கொண்டனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 5,477 பள்ளிகளில் பயின்ற, ஏழு லட்சத்து, 23 ஆயிரத்து, 545 பேர், பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர். இத்துடன், தனித்தேர்வர்கள், 57 ஆயிரத்து, 86 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 1,890 மையங்களில் தேர்வுகள் நடந்தன.இத்தேர்வு முடிவுகள், முதலிடம் பெற்ற மாணவர்களின் விவரம் மற்றும் பாட வாரியாக முதல் இடம் பெற்றவர்களின் விவரமும் இத்துடன் வெளியிடப்பட்டது.

மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்த விவரம், அந்தந்த பள்ளிகளிலேயே, காலை 10 மணிக்கு அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்பட்டன.மாணவர்கள், தங்கள் மதிப்பெண் பட்டியலை, வரும் 25ம் தேதி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வர்களாக தேர்வு எழுதியவர்கள், தாங்கள் தேர்வு எழுதிய அந்தந்த தேர்வு மையங்களிலேயே மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.

விடைத்தாள் ஜெராக்ஸ் மற்றும் மறு கூட்டல் செய்ய விரும்புபவர்கள், வரும் 11 முதல், 16ம் தேதி வரை, அனைத்து முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், இணை இயக்குனர் (கல்வி) புதுச்சேரி, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறலாம்.விடைத்தாள் நகல் பெறுவதற்கு, மொழிப்பாடம் மாற்றும் ஆங்கிலத் தாள் ஒவ்வொன்றுக்கும், தலா, 550 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு, 275 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.

Thursday, May 5, 2011

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ப் பெண் வெற்றி

கனடாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராதிகா சிற்சபை ஈசன் என்னும் தமிழ்ப் பெண் வெற்றி பெற்றுள்ளார்.
கனடா நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் எம்.பி. இவர் தான்.
ராதிகா புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
கனடாவில் இந்த பொதுத் தேர்தலில் மீண்டும் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது.

பீகார் நாட்டின் பசுமை மாநிலமாக மாறும்: அப்துல்கலாம்

நாட்டில் 2 வது பசுமை புரட்சி பீகார் மாநிலம் பலிகஞ்சில் ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்தார்.
பீகார் மாநிலம் பலிகஞ்சில் விவசாயிகள் கூட்டத்தில் பேசிய அவர் கூறுகையில், பலிகஞ்ச் விவசாயிகள் 2 வது பசுமை புரட்சியை படைக்கும் திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களது முயற்சியால் விவசாய உற்பத்தி இரண்டு மடங்காக ஆகியுள்ளது.
பலிகஞ்ச் விவசாயிகளின் இந்த முயற்சி தொடர வேண்டும். இதன் மூலம் பீகாரை நாட்டின் பசுமை மாநிலமாக மாற்ற வேண்டும். இம்மாநிலத்தில் உணவு உற்பத்தியை இரண்டு மடங்கு ஆக்க பலிகஞ்ச் மற்றும் இதர மாவட்ட விவசாயிகளுடன் இங்குள்ள ராஜேந்திரா விவசாய பல்கலைக்கழகம் மற்றும் உள்ள பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்பட வேண்டும்.
புதிய புதிய கண்டுபிடிப்புகளை விவசாயத்தில் புகுத்த வேண்டும். இதற்கு விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும். அப்போது மட்டுமே உணவு உற்பத்தியில் நமது இலக்கை அடைய முடியும். இதன் மூலம் 2020 ம் ஆண்டில் உணவு உற்பத்தியை 28 கோடி டன்னில் இருந்து 34 கோடி டன்னாக உயர்த்த முடியும்.
விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம், வீரிய விதைகள் ஆகியவற்றை அடங்கிய அறிவு சார்ந்த விவசாயமாக 2 வது பசுமை புரட்சி அமைய வேண்டும். விவசாய தொழில் நுட்பம் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் பேசினார்.

Wednesday, May 4, 2011

Amazing One Wheeled Motorcycle!

EMBRIO - One-Wheeled Motorcycle!

The EMBRIO Advanced Concept is a one-wheeled recreational and commuting vehicle for the year 2025, designed by the Canadian company Bombardier Recreational Products. Although the riding position is similar to that of a motorcycle, the vehicle uses sensors and gyroscopes to balance up to two passengers on a large single wheel whilst driving. Specifications and pictures of this weird motorcycle are showed below:
One-Wheeled Motorcycle!
TECHNICAL SPECIFICATIONS
MODEL NAME: EMBRIO Advanced Concept
DEVELOPED BY:Bombardier Recreational Products
STATUS: Concept
YEAR: 2003
DRIVE SYSTEM: Fuel cell electric
FUEL: Hydrogen
LENGTH: 1,240 mm (48.8 in)
WIDTH: 700 mm (27.5 in)
HEIGHT: 1,200 mm (47.5 in)
WEIGHT: 164 kg (360 lbs)
SEATING CAPACITY: 2
 One-Wheeled Motorcycle!
One-Wheeled Motorcycle!
Although the vehicle will also remain stable when motionless, with two small front wheels deployed at speeds below 20 kilometres per hour (12.5 mph). To move forward, the rider activates a trigger on the left handlebar. At a speed of 20 kilometres per hour (12.5 mph) the front wheels or “landing gear” retracts so the rider is balancing on the large single wheel. To turn the rider leans to the left or right. The brake is activated by a trigger on the right handlebar. Fuel cells running on hydrogen provide electricity for the electric motor which drives the single wheel.

Monday, May 2, 2011

பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் இஸ்லாமிய வங்கிமுறையே ஒரே தீர்வு!

மத்தியக் கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பெரும்பாலான அரபு நாடுகளில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வரும் இஸ்லாமிய வங்கி முறை, இந்தியா மட்டுமின்றி வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார, விவசாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்கும் என்று பிரபல பொருளியல் வல்லுநர் இர்பான் ஷாகித் கருத்து தெரிவித்துள்ளார்.


பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிரபல பொருளியல் வல்லுனர்களால் பொருளியல் தீர்வுக்கான சிறந்த மாற்று என ஒப்புக்கொள்ளப்பட்ட இஸ்லாமிய வங்கிமுறை (Islamic Banking) என்பது வட்டியில்லா வங்கி முறையாகும். கடன் வாங்குபவரையும், கொடுப்பவரையும் கடனாளி, கடன்காரர் என்ற நிலையிலிருந்து முதலீட்டாளர்களாக மாற்றி இருவரின் பொருளாதார தேவைகளிலும் வங்கி தலையிட்டுத் தீர்க்கும் வங்கியல் முறை, பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளன.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடந்த இஸ்லாமிய வங்கியல் குறித்த கருத்தரங்கில் பிரபல பொருளியல் வல்லுனர் இர்பான் ஷாகித் பேசும்போது,நமது நாட்டின் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க இஸ்லாமிய வங்கியல் முறையே சரியான தீர்வாகும் என்று பேசியுள்ளார்.

கடந்த 2001 செப்டம்பர்-11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவில் முதலீடு செய்துள்ள அரேபிய வணிகர்களின் நிதியாதாரங்கள், அல்காயிதாவுடன் தொடர்பு படுத்தப்பட்டு முடக்கப்பட்டதைத் தொடர்ந்து 600 பில்லியன் டாலர் மதிப்பிலான அவர்களின் முதலீடுகளை அமெரிக்கா தவிர்த்து எனைய ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

சேமிப்புகளுக்கும் முதலீடுகளுக்கும் வட்டி வசூலிப்பதை இஸ்லாம் தடைசெய்திருப்பதால் தங்களது சேமிப்புகளும் முதலீடுகளும் பாதுகாப்பாக இருப்பதற்கு அராபிய ஷேக்குகள் இஸ்லாமிய வங்கிகளே பாதுகாப்பானது என்பதால் அரபு நாடுகள் மட்டுமின்றி உலகெங்கும் சுமார் 75 நாடுகளில் 500க்கும் அதிகமான கிளைகளைக் கொண்டுள்ள இஸ்லாமிய வங்கிகளில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இஸ்லாமிய வங்கியல் என்ற பெயரிருந்தாலும் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் பயன்பெறத்தக்க வங்கியல் முறையே இஸ்லாமிய வங்கி முறையாகும் என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம். மாற்று வங்கியியல் (Alternative Banking), ஷரியா பைனான்ஸ் (Sharia Finance) என்றெல்லாம் அறியப்படும் இஸ்லாமிய வங்கியல் முறையை உலகெங்கும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் பின்பற்றி வருகின்றன. சர்வதேச வங்கிகளான Standard Chartered,HSBC ஆகியவை தங்களின் பழைய வங்கியியல் நடைமுறையுடன் (Convetional Banking) இஸ்லாமிய வங்கியியல் முறைக்கு கடந்த ஐந்தண்டுகளுக்கு முன்பே மாறத் தொடங்கி விட்டன.

உலகெங்குமுள்ள முதலீட்டாளர்களை ஈர்த்துள்ள இஸ்லாமிய வங்கியல் முறையை இந்தியாவில் கேரள அரசு சமீபத்தில் நடைமுறைப் படுத்தியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் ஜனதா கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வருபவருமான சுப்ரமணிய சுவாமி இதற்கு எதிராகத் தொடர்ந்திருந்த வழக்கிற்கு எதிராக உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து கேரளாவில் கடந்த பிரவரிமுதல் இஸ்லாமிய வங்கியியல் முறைக்கான ஆயத்த ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த இருவருடங்களாக உலகெங்கும் நிலவும் பொருளாதார மந்தநிலையைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச வங்கிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்தபோதும்,இஸ்லாமிய வங்கிகளின் வளர்ச்சி 200%அதிகரித்தன் மூலம் தற்கால பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான சரியான மாற்றுத் தீர்வு இஸ்லாமிய வங்கியல் முறையே என்ற கருத்து உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி

இந்தியாவில் அரசியல் பணம் கொழிக்கும் தொழிலாக மாறி வரும் நிலையில், இந்தியாவிலுள்ள 30 முதல்வர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கணக்குக் காட்டப்பட்ட வரை, அதில் நமது தமிழக முதல்வர் கருணாநிதி இரண்டாமவராக ரூ. 44 கோடி சொத்து மதிப்பில் உள்ளார். முதலிடத்தில் உ.பி முதல்வர் மாயாவதி உள்ளார்.

முதல்வர்களின் சொத்து விபரங்கள் பட்டியல் பின்வருமாறு:
1.மாயாவதி (55) - உத்தரபிரதேசம் - ரூ. 87 கோடி
2.மு.கருணாநிதி (86) - தமிழ்நாடு - ரூ. 44 கோடி
3. டோர்ஜி காண்ட் (56) - அருணாச்சல பிரதேசம் - ரூ. 23 கோடி
4. பிரகாஷ் சிங் பாதல் (83) - பஞ்சாப் - ரூ. 9.20 கோடி
5. கிரண்குமார் ரெட்டி (50) - ஆந்திரா - ரூ. 8.11 கோடி
6. நவீன் பட்நாயக் (64) - ஒரிசா - ரூ. 7.89 கோடி
7. நெய்பியூ ரியோ (60) - நாகலாந்து - ரூ. 7.23 கோடி
8. பிரிதிவிராஜ் சவான் (65) - மராட்டியம் - ரூ. 6.81 கோடி
9. வி.வைத்திலிங்கம் (60) - புதுச்சேரி - ரூ. 5.70 கோடி
10. தருண் ஹோகை (75) - அசாம் - ரூ. 4.94 கோடி
11. பவான் சாம்ளிங் (60) - சிக்கிம் - ரூ. 3.82 கோடி
12. பூபிந்தர் சிங் ஹூடா (63) - அரியானா - ரூ. 3.74 கோடி
13. உமர் அப்துல்லா (41) - ஜம்மு காஷ்மீர் - ரூ. 3.49 கோடி
14. முகுல் சங்மா (46) - மேகாலயா - ரூ. 3.42 கோடி
15. திகாம்பர் காமத் (57) - கோவா - ரூ. 3.23 கோடி
16. லலித்வாலா (69) - மிசோரம் - ரூ. 2.29 கோடி
17. எடியூரப்பா (68) - கர்நாடகா - ரூ. 2 கோடி
18. நிதிஷ் குமார் (60) - பீகார் - ரூ. 1.5 கோடி
19. அர்ஜுன் முண்டா (43) - ஜார்கண்ட் - ரூ. 1.33 கோடி
20. சிவராஜ் சவுகான் (52) - மத்திய பிரதேசம் - ரூ. 1.23 கோடி
21. ஷீலா தீட்சித் (73) - டெல்லி - ரூ. 1.18 கோடி
22. பி.கே.துமால் (67) - இமாச்சல பிரதேசம் - ரூ. 1.18 கோடி
23. அசோக் ஹெலாட் (60) - ராஜஸ்தான் - ரூ. 1.04 கோடி
24. ராமன் சிங் (58) - சத்தீஸ்கர் - ரூ. 1 கோடி
25. புத்ததேவ் பட்டாச்சார்யா (67) - மேற்கு வங்காளம் - ரூ. 46.20 லட்சம்
26. நரேந்திர மோடி (60) - குஜராத் - ரூ. 42.56 லட்சம்
27. ரமேஷ் போக்ரியால் (52) - உத்தரகாண்டம் - ரூ. 37.30 லட்சம்
28. அச்சுதானந்தன் (87) - கேரளா - ரூ. 16.09 லட்சம்
29. மாணிக் சர்கார் (62) - திரிபுரா - ரூ. 8.11 லட்சம்
30. ஒக்ரம் இபாபி சிங் (63) - மணிப்பூர் - ரூ. 6.09 லட்சம்

பாமர மக்கள் தரும் லஞ்சம் ரூ.471 கோடி: கடந்த 4 ஆண்டில் அதிகரிப்பு

புதுடில்லி:நாட்டின் கிராம பகுதி மக்கள் ரேஷன் கார்டு, சுகாதாரம், கல்வி, தண்ணீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளை பெற, கடந்தாண்டில் 471 கோடியே 80 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளனர்.

"இந்திய ஊழல் ஆய்வு 2010' என்ற தலைப்பில், மீடியா ஆய்வு மையம், 12 மாநிலங்களில், 9,960 வீடுகளில், இதுதொடர்பாக ஆய்வு நடத்தினர். வடகிழக்கு மாநிலங்கள், மகாராஷ்டிரா, சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில் நடத்திய இந்த ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதில் கூறப்பட்ட தகவல்:நாட்டில் ரேஷன் கார்டு, சுகாதாரம், கல்வி, தண்ணீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளை பெற, கிராமப்புற மக்கள், கடந்தாண்டில் மட்டும் 471 கோடியே 80 லட்சம் ரூபாய் லஞ்சம் வழங்கியுள்ளனர். சராசரியாக ஒரு குடும்பத்தில் இருந்து வழங்கப்பட் லஞ்சம் 164 ரூபாய். அசாம், குஜராத், கேரளா, இமாச்சலபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத சட்டத்திற்கு 2010 - 2011ம் ஆண்டில், செலவிடப்பட்ட தொகையுடன் ஒப்பிடும் போது, இந்த 471 கோடியே 80 லட்சம் ரூபாய் அதற்கு சமமானது என்று கூறலாம்.அதிகபட்சமாக பொதுப் பணித்துறைக்கு 11.5 சதவீதம், மருத்துவமனைக்கு 9 சதவீதம், பள்ளிக்கு 5.8 சதவீதம், தண்ணீருக்கு 4.3 சதவீதம் லஞ்சம் கொடுத்துள்ளனர். சமூக, பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்கள் தான் அதிகளவில் இந்த லஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர், பொதுப் பணித்துறையில் லஞ்சம் அதிகரித்து விட்டதாக தெரிவித்தனர்.மாத வருமானம் 5,000 ரூபாய் அல்லது அதற்கு கீழ் பெறுபவர்களில் நான்கில், மூவர் இதுபோன்ற அடிப்படை வசதிகளை பெற லஞ்சம் கொடுக்க வேண்டியது உள்ளது. இவர்கள் பெரும்பாலும், அரசின் சலுகைகள் பெற்று வாழும் ஏழைகள்.

அரசு பொது மருத்துவமனையில் வெளிப்புற நோயாளியாக இருந்து சிகிச்சை பெறுவதற்கு முறையான அட்டை பெற, ஒரு ரூபாய், இரண்டு ரூபாயும், எக்ஸ்ரே, ரத்தம், சிறுநீர் பரிசோதிக்க தனியாக அதிக அளவு லஞ்சம் கொடுத்துள்ளனர்.ரேஷன் கார்டு விண்ணப்பம் பெற ஐந்து ரூபாயும், எந்த ஆவணங்களும் இல்லாமல், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான கார்டு பெற 800 ரூபாயும் லஞ்சம் கொடுத்துள்ளனர்.முறையான தண்ணீர் இணைப்பிற்கு, பல்வேறு வகையான சேவைகளுக்கு 15 முதல் 950 ரூபாய் வரை லஞ்சமாக கிராம மக்கள் வழங்கியுள்ளனர். விவசாய நிலங்களுக்கும் சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விட இதுபோன்று லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.இப்படிவழங்கபட்ட லஞ்சத்தில், பொதுப்பணித் துறைக்கு 156 கோடியே 80 லட்சம் ரூபாயும், தண்ணீர் இணைப்பு மற்றும் சேவை பணிகளுக்கு 83 கோடியே 30 லட்சம் ரூபாயும், மருத்துவமனை சேவை பெற 130 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.கடந்த 2005ம் ஆண்டில் இருந்து லஞ்சம் தருவது நான்கு மடங்கு அதிகரித்து காட்டப்பட்டுள்ளன.

* லஞ்ச பட்டியலில் சத்திஸ்கர், பீகார் மாநிலங்கள் முதல் இடத்தில் உள்ளன. பொதுப்பணித்துறையில் லஞ்சம் அதிகரித்து விட்டதாக, இம்மாநிலங்களை சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.
* பீகாரில், கடந்த 2005ம் ஆண்டில், ஊழல் இருப்பதாக 87 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர். இது, நடப்பாண்டில் 66 சதவீதமாக குறைந்துள்ளது.
* இடதுசாரிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், ஊழல் அதிகரித்து இருக்கிறது.இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய ஆலோசனை கமிட்டி உறுப்பினர் அருணா ராய் கூறுகையில், "ஊழலை எதிர்த்து ஏழைகள் போராடுகின்றனர். அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறைக்கு ஆளாகின்றனர். வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளுக்கு லஞ்சத்தை கொடுத்துள்ளனர். இவர்கள் சார்பில் போராட முன்வர வேண்டும்' என்றார்.

நாட்டில் 2030ல் தண்ணீர், உணவு பற்றாக்குறை ஏற்படும்: சர்வதேச ஆய்வில் தகவல்

புதுடில்லி:"இந்தியாவில் 2030ம் ஆண்டில் தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படும்' என, சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், "உலக தட்பவெப்ப மாற்றம் மற்றும் உள்நாட்டு மக்கள் தொகை பெருக்கம் ஆகிய காரணங்களால் இந்தியா தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கும். இது, அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய மற்றும் எதிர்பாராத அளவிற்கு உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையை ஏற்படுத்தும்.இந்தியாவிற்கு 700 பில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில், 85 சதவீதம் உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த தேவை 2030ம் ஆண்டில், மக்கள் தொகை அதிகரிப்பால், இரண்டு மடங்காக அதிகரிக்கும். 2030ம் ஆண்டில், இந்தியாவின் மக்கள் தொகை, 120 கோடியில் இருந்து 160 கோடி அல்லது 170 கோடியாக அதிகரிக்கும். அதேபோல், தண்ணீர் தேவையும், இருமடங்கு, அதாவது 1,498 பில்லியன் கியூபிக் மீட்டராக அதிகரிக்கும். ஆனால், தண்ணீர் அளிப்பு 744 மில்லியன் கியூபிக் லிட்டர்களாக இருக்கும். தேவையில் பாதியளவு பற்றாக்குறையாக இருக்கும்' என்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து இந்நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் கோலின் சார்டிரஸ் கூறுகையில், "தற்போதைய நிலை நீடித்தால், மத்திய கிழக்கு நாடுகளை போல, தண்ணீர் நெருக்கடி நாடாக இந்தியா உருவெடுக்கும். பெரும்பாலான தண்ணீர் உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறை, உணவு பற்றாக்குறையிலும் எதிரொலிக்கும். தண்ணீர் இறக்குமதிக்கு பதில், இந்தியா உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியது ஏற்படும். உலகளவில் மக்கள் தொகை 250 கோடி அதிகரிக்கும் போது, உணவு இறக்குமதியும் எளிதானது அல்ல. தற்போது இருப்பதை விட, அதிக வெப்பம், குறைந்த தண்ணீர் என்ற நிலைமை உலகளவில் நிலவும்' என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நிலத்தடி நீர் ஏற்கனவே கீழே போய்விட்டது. இந்தியா அதிகளவில் விவசாயத்தை நம்பி உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை, பெரிய அளவில், விவசாய உற்பத்தியை பாதிக்கும். நாட்டின், வடக்கில் ஏற்கனவே விவசாயிகள் அதிகளவில் நிலத்தடி நீரை பயன்படுத்திவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன."இந்தியாவின் தண்ணீர் தேவை தற்போது 634 மில்லியன் கியூபிக் லிட்டராக உள்ளது. இது, 1,123 மில்லியன் கியூபிக் லிட்டராக அதிகரிக்கும்' என்று மத்திய நீர்வள கமிஷன் கணித்துள்ளது.

"இந்தியாவின் தண்ணீர் தேவை 2025ல், 1,093 மில்லியன் கியூபிக் லிட்டராக இருக்கும்' என்று நிர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இப்படி, மதிப்பீடுகள் வித்தியாசப்பட்டாலும், தண்ணீர் பற்றாக்குறை நாட்டை அச்சுறுத்தி வருகிறது என்பது தெளிவாகிறது.எனவே, நாட்டில் கிடைக்கும் தண்ணீர் வரத்து குறித்து ஆய்வு நடத்த, முன்னாள் திட்ட கமிஷன் உறுப்பினர் ஏ. வைத்தியநாதன் தலைமையில் ஒரு குழுவை மத்திய திட்ட கமிஷன் அமைக்க உள்ளது. இவர்கள் நாட்டின் தண்ணீர் ஆதாரத்திற்கான மூலம் மற்றும் குளம், குட்டை, ஏரி, அணை, ஆறு ஆகியவை குறித்து, மதிப்பீடு செய்து, அறிக்கை தயாரிப்பார்கள். "நாட்டின் விவசாயத்திற்கு 80 சதவீத தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே, கிராமங்களில் தண்ணீர் வீணாக்கப்படுவதை தடுக்கும் வகையில், ரேஷனில் மின்சாரம் மற்றும் தண்ணீர் வழங்குவது, இதற்கு கட்டணம் விதிப்பது என்று திட்ட குழு ஆலோசனை வழங்கி உள்ளது.

கடந்த மாதம், பிரதமர் மன்மோகன் சிங்கிடம், திட்ட கமிஷன் உறுப்பினர் மிகிர் ஷா தண்ணீர் மேலாண்மை தொடர்பான அறிக்கை சமர்பித்தார். அதில், ஆந்திரபிரதேசம் உள்பட மிகவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏழு மாநிலங்களில், தண்ணீர் மேலாண்மை ஆலோசனை எந்தளவிற்கு வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.ஆந்திராவில், விவசாயிகள் குழு அமைத்து, கிடைக்கும் தண்ணீரை இவர்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது. இத்திட்டம், அம்மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ளது. மாவட்ட அளவில் தண்ணீர் பயன்படுத்துவது குறைந்து, பற்றாக்குறையும் குறைந்துள்ளது. மாநிலத்தின் மற்ற பகுதிகளில், இதேபோன்ற திட்டத்தை கொண்டு வர, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு திட்ட கமிஷன் ஆலோசனை வழங்கலாம்.

"இந்தியாவின் தட்பவெப்பம் ஒன்று முதல் இரண்டு டிகிரி அதிகரிக்கும்' என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அதிகளவில் தண்ணீர் சேமிப்பு செய்ய வேண்டும். மழை நீர் சேமிப்பிற்கு, இந்தியா, அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும். குளம், ஏரி, அணை போன்வற்றை அதிகளவில் ஏற்படுத்தி நீர்வள ஆதாரத்தை பெருக்க வேண்டும். விவசாய நிலங்களை ஒட்டி குளம், ஏரி ஏற்படுத்துவது பயனளிப்பதாக இருக்கும் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன.

Tips to improve Fuel Economy

Here are some very good tips on improving your vehicle's Fuel Economy / Increase Fuel Efficiency / Mileage. With increasing fuel prices it is becoming more and more prudent to use them.
Use your gears wisely.
Driving in the highest gear possible without labouring the engine is a
fuel-efficient way of driving. A vehicle travelling at 60kmph in third gear
uses 25 percent more fuel than at the same speed in fifth gear

Drive smoothly
Think ahead! By applying light throttle and avoiding heavy braking, you can
reduce both fuel consumption and wear and tear. Try to predict traffic at
junctions and when in queuing to avoid accelerating and then braking.
Research suggests driving techniques can influence car fuel efficiency by as
much as 30 percent.

Switch off your engine
There are two schools of thought on this one. Switching your engine off for
short periods of time can actually increase fuel consumption, as it requires
more fuel to get the engine started. Also your catalytic converter will no
longer be running at full temperature and so your car will be less
efficient, increasing the amount of pollution you cause. However if you are
stopped for more than a few minutes then your car will simply burn less fuel
with the engine stopped.

Drive off promptly to prevent wasting fuel
Don't leave your engine running when you first start up. Drive off straight
away if you can, but drive gently until the engine has reached its normal
operating temperature. This doesn't increase fuel efficiency as such, but it
does mean your engine is switched on for less time.

Lighten your load
Think carefully about what you need on a journey. if you do not need
something, do not pack it. Remove roof racks if not needed. The lighter the
load, the lower the fuel consumption, and emissions, and the higher the fuel
efficiency.

Tyres effect fuel efficiency
It is estimated that about 50% of tyres on the road are under inflated.
Aside from increasing the rate of wear, this wastes fuel and decreased your
fuel efficiency. Check your tyre pressures every fortnight. Worn tyres will
also decrease fuel efficiency (and your safety!), so check the tread
regularly. If you are replacing tyres then consider some of the newer 'Eco'
tyres that are designed specifically to increase fuel efficiency.

Car Windows
Driving with your windows open drastically reduces your fuel efficiency, far
more so than putting the air conditioning on when motorway driving. So in
those hot summers(?) preferably keep the windows shut, and the air
conditioning on if you want to keep cool. Of course the air conditioning
decreases fuel efficiency too, so try not to over use it.

Invest in a new fuel efficient car
New cars come in all shapes and sizes, but it is possible to pick a new car
that can greatly reduce your fuel bill, and your fuel emissions.

Size matters. Choose an economical car - small cars use far more fuel
efficient and produce lower emissions than large cars.

Drive the most fuel-efficient car that meets your needs. Compare models and
classes. Even similarly sized cars can vary in fuel efficiency by up to 45%.

Consider diesel engines (with a particulate trap), and LPG (Liquefied
Petroleum Gas) and CNG (Compressed Natural Gas) fuelled cars - all have
lower CO2 emissions than standard petrol cars.

Consider 'hybrid' vehicles - they combine a conventional engine with an
electric motor and battery. These offer reduced fuel consumption and CO2
with potentially lower emissions of all pollutants.

Diesel Engines
If your going to buy a diesel, ensure it is a new 'common rail' type, as
these are approximately 10% more efficient than older diesels. also replace
(or clean if applicable) air cleaner elements as often as is required by
your vehicles servicing schedule.

Regluar Maintenance maintains fuel efficiency

Air Filter:
One of the most common reasons for a drop in fuel efficiency is a dirty
intake filter. This will decrease the amount of air entering the cylinders
of the engine resulting in incomplete combustion. Check the filter regularly
to ensure that it is clean.


Spark Plugs

Ensure your spark plugs are in good condition. Renew the plugs and wires at
intervals specified by the owners manual. This will keep all cylinders
firing properly resulting in higher efficiency.


Lube Oil:
Change the lube oil at intervals specified by the owners manual. Use the
recommended oil only especially in newer cars. Use of an engine flush before
changing the oil will help to get rid of a lot of the dirt that collects in
the engine that a normal oil change will not remove. On older engines it is
advisable to use an oil treatment agent. This basically thickens the oil
which creates a better seal between the piston and the liner, preventing
blow past and consequent loss of combustion pressure, resulting in higher
fuel efficiency.

Exhausts alter fuel efficiency
Most cars have special sizes for the exhaust. When cars are reasonably old
the silences has to be changed. The garage people always try to fit a size
that they have in the garage it self. Which might not be the exact size
recommended for the car. The wrong size a bigger or smaller silencer size
effects on the MPG of the car and the HP of the car. It may be cheaper to
put another size than your recommended size for your car but on the long run
it will cost you in many ways, especially on fuel consumption. Always put
the recommended size of the exhaust that is indicated in your car manual
because the car company knows how to optimize the performance of your car.