Tuesday, September 27, 2011

பஞ்சர் பிரச்னைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் பஞ்சர் ஜெல்

வாகனத்தில் செல்லும்போது நம்மை டென்ஷனின் உச்சிக்கே கொண்டு செல்வது பஞ்சர் பிரச்னை. அலுவலகம் செல்லும்போதோ, அவசரமாக செல்லும்போதோ டயர் பஞ்சரானால் நமக்கு பிபி எகிறுவது இயல்பு. குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பஞ்சராகும்போது நேர்கொள்ளும் அவஸ்தைகள் ஏராளம்.

இந்த நிலையில், பஞ்சர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு திரவம் போன்று இருக்கும் பஞ்சர் ஜெல் உதவுகிறது. இந்த பஞ்சர் ஜெல்லை(பஞ்சர் சீலேண்ட் என்றும் கூறுகின்றனர்) சிறிய கம்ப்ரஷர் மூலம் வாகனங்களின் ட்யூப்களில் செலுத்துகின்றனர்.

டயர் பஞ்சராகும்போது ட்யூப் உள்ளே ஊற்றப்பட்டிருக்கும் இந்த திரவம் அந்த இடத்தில் உறைந்து பஞ்சராகாமல் பாதுகாக்கும். தற்போது பஞ்சர் கில்லர் என்ற நிறுவனம் தயாரிக்கும் பஞச்ர் ஜெல் மார்க்கெட்டிற்கு வந்துள்ளது.

இந்த பஞ்சர் புரூப் ஜெல் எத்தனை முறை டயர் பஞசர் ஆனாலும் ட்யூப்களிலிருந்து காற்று வெளியேறாமல் தடுக்கும் என்று பஞ்சர் கில்லர் நிறுவனம் தெரிவிக்கிறது. எனவே, டயர் முழுவதும் இந்த ஜெல் பஞ்சர் தொல்லையிலிருந்து விடுதலை கொடுக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

முள், ஆணி என்று எதுவாயினும் டயர்களில் குத்தி பஞ்சராக்கினாலும், பஞ்சர் கில்லர் ஜெல் நிரப்பப்பட்ட டயர்களில் காற்று வெளியேறாது என்று அந்த நிறுவனம் தனது தயாரிப்புக்கு சான்றளிக்கிறது.

பஞ்சர் கில்லர் சில முக்கிய அம்சங்கள்:

டயர்களிலிருந்து காற்று கசிவு மற்றும் பஞ்சரனால் காற்று வெளியேறாமல் தடுக்கும்

டயர்களின் ஆயுளை கூட்டும்

சாதாரண டயரை பஞ்சர் புரூப் டயராக மாற்றும்

ட்யூப்களில் காற்றின் அளவை சீராக வைக்கும்

பஞ்சர் கில்லர் ஜெல் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாது

சாதாரண டயர் மற்றும் ட்யூப்லெஸ் டயர்களில் பயன்படுத்தலாம்

நிம்மதியான பயணத்தை வழங்கும்

இதுதொடர்பாக, பஞ்சர் கில்லர் நிறுவனத்தின் அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டு கேட்டோம். அவர் கூறியதாவது,"ஒரு லிட்டர் பஞ்சர் கில்லர் ஜெல் விலை ரூ.1,399க்கு விற்பனை செய்கிறோம். இருசக்கர வாகனங்களின் இரண்டு டயர்களுக்கும் சேர்த்து 600 மிலி இருந்தால் போதுமானது. எங்களிடம் ஆர்டர் செய்தால் எங்களது பிரதிநிதிகளே நேரில் வந்து டயர்களில் பஞ்சர் கில்லர் ஜெல்லை செலுத்திக்கொடுத்துவிடுவர்," என்று கூறினார்.

No comments: