Wednesday, June 20, 2012

சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது???

பொதுவாக அனைவரும் துணியை துவைப்பது என்றால் நீரில் அலசி, பின் சோப்பு நீரில் ஊற வைத்து, பிறகு நல்ல தண்ணீரில் அலசுவோம். ஆனால் கரையானது நன்கு போக வேண்டுமென்றால் சுடு தண்ணீரில் ஊற வைத்து அலசுவோம். இதனால் துணியில் கரை மட்டும் செல்வதில்லை துணியின் தரமும் தான் பாதிக்கப்படுகிறது. ஆகவே துணிகளை சுடு ததண்ணீரில் அலசும் போது பார்த்து அலச வேண்டும்.
அலசினால் என்ன ஏற்படும்...?
1. துணி சுருக்கிவிடும் : துணிகளை லான்டரியில் போடுகிறோம், அங்கு துணிகளில் உள்ள கரைகள் நீங்க சுடு தண்ணீரை பயன்படுத்துகிறார்கள், அதனால் துணிகளானது கரை இல்லாமல் பளிச்சென்று இருக்கிறது. ஆனால் அந்த துணிகளைப் போட்டு பார்த்தால் இறுக்கமாக இருக்கும். அப்போது நீங்கள் குண்டாகிவிட்டீர்கள் என்று நினைப்பீர்கள், ஆனால் உண்மையில் துணியானது சுருங்கி இருக்கும். ஏனெனில் சுடு நீரானது துணியின் மெட்டீரியலை பாதிக்கும்.
2. நிறம் மங்குதல் : சுடு நீரானது துணியின் கலரை நீக்கும் சக்தியுடையது. ஏனெனில் சுடு தண்ணீரில் உள்ள வெப்பத்தின் அளவானது துணியில் உள்ள நிறத்தை அகற்றிவிடும்.
3. நூல் நஞ்சிவிடுதல் : சுடு நீரில் அலசும் துணி சுருங்குவதால், துணியில் உள்ள நூல்கள் வலுவிழந்து நஞ்சிவிடுகிறது. மேலும் சுடு தண்ணீரில் ஊற வைத்து துவைக்கும் துணியில் அழுக்கை போக்க பிரஸ் போட்டால் கண்டிப்பாக துணியானது கிழிந்து விடும்.
நினைவில் கொள்ள வேண்டியவை...
1. துணியை வாங்கும் போது அதில் துணியைப் பற்றி லேபிளில் போட்டிருப்பதை படிக்க வேண்டும். முக்கியமாக துணியை சுடு நீரில் அலசலாமா, வேண்டாமா என்று பார்ப்ப வேண்டும். காட்டனை சுடு தண்ணீரில் அலசலாம், ஆனால் லேபிளில் கொடுத்திருப்பதையும் பார்க்க வேண்டும்.
2. வேண்டுமென்றால் துணியின் சிறு பகுதியை சுடு நீரில் 4 5 நிமிடம் வரை ஊற வைத்து, சுருங்கியிருந்தாலோ அல்லது நிறம் போனாலோ அந்த துணியை சுடு நீரில் போட வேண்டாம். இதனால் துணியை சுடு நீரில் போடலாமா வேண்டாமா என்று தெரிந்து விடும்.
3. பொதுவாக துணிகளை 10 15 நிமிடத்திற்கு மேல் சுடு தண்ணீரில் ஊற வைக்க வேண்டாம். இதனால் எந்த துணியானாலும் சுருக்கத்தை அடையும்.
4. சுடு நீரில் அலச இருக்கும் துணியை வெதுவெதுப்பான தண்ணீரில் அலசினால் துணியானது விரைவில் பாதிப்படைவதைத் தடுக்கலாம்.
துணிகள் நீண்ட நாட்கள் வர வேண்டும் என்று நினைத்தால், சுடு நீரில் பெரும்பாலும் அலசுவதை தவிர்க்கவும். கரைகள் போக சுடு நீரில் போடுவதற்கு பதில் மற்ற பொருட்களான எலுமிச்சை, பேக்கிங் சோடா அல்லது வினிகரை பயன்படுத்தலாம்.
http://tamil.boldsky.com/home-garden/improvement/2012/why-not-wash-clothes-hot-water-001391.html

கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா?

இப்ப வீட்ல இருக்கிற துணிகளுக்கு பஞ்சமே இல்லை. ஆனா அப்படி இருக்கிற துணிகளை நிறைய பேருக்கு பத்திரமா அழகா வெச்சுக்க தெரியவில்லை. அப்படி தெரியாத அவர்கள், மேலும் மேலும் நிறைய துணிகளை வாங்கி அதையும் ரொம்ப நாள் வெச்சுக்கத் தெரியாம அடுக்கி வெச்சுக்கிறாங்க. அப்படி இருக்கிறவங்களுக்கு துணிகளை அழகா வெச்சுக்க இதோ சில டிப்ஸ்...

1. துணிகளை அலசி நீலம் போடும் போது, நீலம் ஒன்று போல் தண்ணீரில் பரவ சிறிய முடிச்சுகளில் நீலத்தைக் கட்டி நீரில் கலந்து துணிகளை அலசினால் துணியானது வெண்மையாக, அழகாக காணப்படும்.

2. பட்டுப் புடவைகளை துவைக்கும் போது அதனுடன் பொடித்த பூந்திக் கொட்டைகளை உபயோகிக்கலாம். இறுதியில் மண்ணெண்ணெய் கலந்த நீரில் அலசி எடுத்தால் பூச்சி வெட்டாமலும் சாயம் போகாமலுமிருக்கும். மேலும் ஸ்வெட்டர் போன்றவைகளை பேப்பரில் மடித்து வைத்தால் பூச்சி வெட்டாது.

3. துணிகளில் படும் டீக்கரையைப் போக்க சர்க்கரையை உபயோகிக்கலாம். மேலும் வெள்ளைத் துணிகளில் படும் கரையைப் போக்க ப்ளீச்சிங் பவுடரை தண்ணீரில் கரைத்து உபயோகிக்கலாம்.

4. வெள்ளை நிற சட்டைகளை நீலநிற டிஷ்யூ பேப்பரில் அல்லது நீலநிறத் துணியில் சுற்றி வைத்தால் பழுப்பு நிறம் ஏறாமலிருக்கும்.

5. எண்ணெய் கறையை போக்க ப்ளாடிங் பேப்பரை துணியின் மேலும் கீழும் வைத்து அயர்ன் பண்ணினால், எண்ணெய் கரை போய்விடும்.
http://tamil.boldsky.com/home-garden/improvement/2012/tips-keep-your-dresses-safely-001210.html

வருவாய்,கல்வியில் இந்திய அமெரிக்கர்கள் டாப்

வாஷிங்டன் : அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள், உயர்ந்த வருமானம் மற்றும் சிறந்த கல்வி பெற்றவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா வாழ் ஆசியர்கள் 3வது இடத்தில் உள்ளனர். அமெரிக்க மக்கள் தொகையில் ஆசியர்கள் அதிக படிப்பறிவு பெற்றவர்களாகவும், கூடுதல் வருமானம் ஈட்டுபவர்களாகவும் உள்ளதாக தி ரோஸ் ஆஃப் ஆசியன் அமெரிக்கன் என்ற தலைப்பில் ப்யூ ரிசர்ச் சென்டர் வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வாழும் 3.18 மில்லியன் இந்தியர்கள், 4 மில்லியன் சீனர்கள், 3.4 மில்லியன் பிலிப்பைன்ஸ் நாட்டினர் ஆகியோரின் ஆண்டு வருமானம் 88,000 டாலர்களாக உள்ளது. இது அனைத்து ஆசியர்களின் ஆண்டு வருமானமான 66,000 டாலர்களையும், அமெரிக்கர்களின் ஆண்ட வருமானமான 49,800 டாலர்களையும் விட மிக அதிகமாகும். இந்திய அமெரிக்கர்களின் சொந்த ஆண்டு வருமானம் 65,000 டாலர்களாகவும், அனைத்து ஆசிய அமெரிக்கர்களின் வருமானம் 48,000 டாலர்களாகவும், அமெரிக்கர்களின் வருமானம் 40,000 டாலர்களாகவும் உள்ளன. அமெரிக்காவில் வாழும் 70 சதவீதம் இந்தியர்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர். 
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=490579

Monday, June 18, 2012

பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் புதிய முடிவு: 71 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்ற திட்டம்

நியூயார்க்:நோக்கியா, பெப்சி, சோனி, யாகூ போன்ற 12க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள், இவ்வாண்டு 71 ஆயிரம் ஊழியர்களை, பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளன.

அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள பிரபல நிறுவனங்கள், உலகில் பல நாடுகளில் தங்களது தயாரிப்பு நிறுவனங்களை நிறுவி, அவற்றில் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். பிரபல மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா, குளிர்பான நிறுவனமான பெப்சிகோ, மின்னணுப் பொருட்களைத் தயாரிக்கும் சோனி, கணினி துறையில் உள்ள ஹியூலட் பேக்கார்டு (எச்.பி.,), விமான நிறுவனமான லுப்தான்சா, கேமராக்கள் தயாரிப்பு நிறுவனமான ஒலிம்பஸ் உட்பட 12 நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 71 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்து அறிவித்துள்ளன.

இதில், கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் நோக்கியா நிறுவனம் அடுத்தாண்டு இறுதிக்குள் 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. தற்போது பெருகி வரும் பலத்த போட்டிக்கு இடையே தாக்குப்பிடிக்க முடியாத நிலை இருப்பதும், ஊழியர்களை குறைக்க இந்த நிறுவனம் முடிவெடுத்ததற்கு காரணமாகி விட்டது. ஊழியர்களை குறைப்பதன் மூலம், 200 கோடி டாலர் சேமிக்க முடியும் என்று நிறுவனம் நம்புகிறது.

அதேபோல், கேமராக்களைத் தயாரித்து விற்று வரும் பிரபல ஒலிம்பஸ் நிறுவனம் இன்னும் இரண்டாண்டுகளில் 40 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்றத் திட்டமிட்டுள்ளது. இதில், இம்மாதம் மட்டும் 2700 பேரை வெளியேற்றிவிட நடவடிக்கையைத் துவக்கி உள்ளது. கணினி தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, ஹியூலட் பேக்கார்டு (எச்.பி.,) நிறுவனம் அடுத்த இரண்டாண்டுகளில் 27 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்றவும் முடிவு செய்துள்ளது.

இதேபோல் மேற்கண்ட ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனமும் கணிசமான அளவுக்கு ஊழியர்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளன. இன்னும் ஓராண்டில், 71 ஆயிரம் ஊழியர்கள் இந்த நிறுவனங்களின் பல்வேறு நாடுகளில் உள்ள கிளைகளில் இருந்து வெளியேற்றப்படுவர்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=488635

Tuesday, January 10, 2012

30 மணிநேரம் 6 நிமிடம் தொடர்ந்து பேசி தமிழக இளைஞர் கின்னஸ் சாதனை!

பேரூர்: சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 30 மணி நேரம் 6 நிமிடம் தொடர்ந்து பேசி, உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர். நாகர்கோவிலைச் சேர்ந்தவர் மாடசாமி, 38. தொடக்கப்பள்ளி முதல் எட்டாம் வகுப்பு வரை, கேரளாவிலும், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கம்பம், ராயப்பட்டியில் உள்ள அரசு பள்ளியிலும், திருவனந்தபுரம் பல்கலையில், பி.எஸ்.சி., பட்டமும் பெற்றுள்ளார். தற்போது, கேரளா மாநிலம், இடுக்கிமாவட்டம், பீர்மேடு பகுதியில், கடந்த 1997ம் ஆண்டு முதல், போஸ்டல் அசிஸ்டெண்ட்டாக பணியாற்றி வருகிறார். இவர், சுவிட்சர்லாந்தில் செயல்பட்டு வரும், உலக சமாதான கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளார். இந்த அமைப்பு, போர், யுத்தம் இல்லாத உலகம் உருவாக்குவதை நோக்கமாகவும், சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வை முக்கியமாக கொண்டும், செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ள மாடசாமி, யுத்தமில்லாத உலகம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, வனப்பாதுகாப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில்,தொடர்ந்து 30 மணிநேரம் 6 நிமிடம் பேசி, கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன், கடந்த 2009ல், அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில், மைக்பேசியா என்பவர், 28 மணிநேரம் தொடர்ந்து பேசியதே, கின்னஸ் சாதனையாக இருந்தது. தற்போது, அந்த சாதனையை தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் முறியடித்துள்ளார். இடுக்கி அருகே, பீர்மேடு பகுதியில், ஆயிரக்கணக்கானோர் மத்தியில் இச்சாதனையை மாடசாமி நிகழ்த்தியுள்ளார். கோவையில் மாடசாமி கூறியது: ஒவ்வொரு மணி நேரத்துக்கு, ஒரு தலைப்பு வீதம், கூடங்குளம் அணுமின்நிலையம், உலக மகாயுத்தம், அசாம், மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் லைசென்ஸ் இல்லாமல் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள், சோமாலியா நாட்டில் நிலவும் உணவுபஞ்சம், உலகவெப்பமயமாதல் உள்ளிட்ட 30 தலைப்புகளில் பேசினேன். ஒரு மணி நேரத்துக்கு, ஐந்து நிமிடம் இடைவேளை தரப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிர்ப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, உலகவெப்பமயமாதல் குறித்து, பள்ளி குழந்தைகளிடையே, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன், என்றார்.