Wednesday, June 20, 2012

கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா?

இப்ப வீட்ல இருக்கிற துணிகளுக்கு பஞ்சமே இல்லை. ஆனா அப்படி இருக்கிற துணிகளை நிறைய பேருக்கு பத்திரமா அழகா வெச்சுக்க தெரியவில்லை. அப்படி தெரியாத அவர்கள், மேலும் மேலும் நிறைய துணிகளை வாங்கி அதையும் ரொம்ப நாள் வெச்சுக்கத் தெரியாம அடுக்கி வெச்சுக்கிறாங்க. அப்படி இருக்கிறவங்களுக்கு துணிகளை அழகா வெச்சுக்க இதோ சில டிப்ஸ்...

1. துணிகளை அலசி நீலம் போடும் போது, நீலம் ஒன்று போல் தண்ணீரில் பரவ சிறிய முடிச்சுகளில் நீலத்தைக் கட்டி நீரில் கலந்து துணிகளை அலசினால் துணியானது வெண்மையாக, அழகாக காணப்படும்.

2. பட்டுப் புடவைகளை துவைக்கும் போது அதனுடன் பொடித்த பூந்திக் கொட்டைகளை உபயோகிக்கலாம். இறுதியில் மண்ணெண்ணெய் கலந்த நீரில் அலசி எடுத்தால் பூச்சி வெட்டாமலும் சாயம் போகாமலுமிருக்கும். மேலும் ஸ்வெட்டர் போன்றவைகளை பேப்பரில் மடித்து வைத்தால் பூச்சி வெட்டாது.

3. துணிகளில் படும் டீக்கரையைப் போக்க சர்க்கரையை உபயோகிக்கலாம். மேலும் வெள்ளைத் துணிகளில் படும் கரையைப் போக்க ப்ளீச்சிங் பவுடரை தண்ணீரில் கரைத்து உபயோகிக்கலாம்.

4. வெள்ளை நிற சட்டைகளை நீலநிற டிஷ்யூ பேப்பரில் அல்லது நீலநிறத் துணியில் சுற்றி வைத்தால் பழுப்பு நிறம் ஏறாமலிருக்கும்.

5. எண்ணெய் கறையை போக்க ப்ளாடிங் பேப்பரை துணியின் மேலும் கீழும் வைத்து அயர்ன் பண்ணினால், எண்ணெய் கரை போய்விடும்.
http://tamil.boldsky.com/home-garden/improvement/2012/tips-keep-your-dresses-safely-001210.html

No comments: